இந்தா ஆரம்பிச்சாட்டங்கல்ல!… எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட பாமக எதிர்ப்பு….

Published on: March 7, 2022
anbumani
---Advertisement---

ஜெய்பீம் திரைப்படத்தில் வரும் போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரம் வன்னியரை சித்தரிப்பதாக கூறி, பாமக தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டார்.

ஆனால், சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை. படத்தின் இயக்குனர் மட்டும் வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். எனவே, பாமக தரப்பு சூர்யா மீது கோபமாக இருந்தது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. ஆனால், சூர்யா அசரவில்லை.

suriya

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகிற 10ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிடக்கூடாது என அம்மாவட்ட செயலாளர் விஜயவர்மன் கடலூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். வன்னியரை இழிபடுத்திவிட்டு மன்னிப்பு கேட்காத சூர்யா நடித்துள்ள இப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

pmk

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment