அடுத்த பொங்கலும் செம போர்!.. வரிசை கட்டியிருக்கும் 4 படங்கள்.. நாங்க ஊருக்கே போறோம் சிவாஜி!..

பொதுவாகவே பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு தான் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் ஆனால், இந்த ஆண்டு தீபாவளிக்கும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாமல் டயர் 3 நடிகர்களின் படங்கள் தான் ரிலீசாகப் போவதாக வெளியாகி உள்ள அறிவிப்புகள் ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.

ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜயின் லியோ உள்ளிட்ட படங்கள் இந்தாண்டு தீபாவளி டார்கெட் பண்ணவில்லை. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிரிப்ப அடக்க முடியல!.. சந்திரமுகி 2வை வச்சு செய்யும் ரஜினி ரசிகர்கள்!.. அந்த டைனோசர் மீம் தான் ஹைலைட்!.

மேலும் கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வருகிறது. கடந்த ஆண்டும் தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் உள்ளிட்ட படங்கள் தான் வெளியாகி இருந்தன.

இதைவிட கொடுமை என்னவென்றால் அடுத்தாண்டு பொங்கலுக்கு ஆவது கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா, சீயான் விக்ரமின் தங்கலான், அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட பெரிய படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் அயலான், ஜெயம் ரவியின் சைரன், சுந்தர் சியின் அரண்மனை 4 மற்றும் அருண் விஜயின் வணங்கான் உள்ளிட்ட படங்கள் பொங்கல் 2024க்கு வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: பொங்கலுக்கு சம்பவம் காத்திருக்கு… மிரட்டலாய் வெளியான அரண்மனை4 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

இதில், சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் சுந்தர் சி யின் அரண்மனை 4 படங்கள் பொங்கல் ரிலீஸ் என்பதை உறுதி செய்துள்ளன. இந்தப் படங்களின் பட்டியலை பார்த்த உடனே ரசிகர்கள், இப்பவே சொந்த ஊருக்கு டிக்கெட் எடுத்துவிட்டு உங்களை கிராமத்தில் கொண்டாடி விடலாம், தியேட்டருக்கு போனால் தலைவலி தான் மிச்சம் எனக்கு கமெண்ட் போட்டு கேலி செய்து வருகின்றனர்.

அரண்மனை 4, அயலான் எல்லாம் தேறாத கேஸ் என்றே முடிவு கட்டி விட்டனர். வணங்கான் படத்தில் இருந்து சூர்யாவே ஓடிய நிலையில், யானை அருண் விஜய்யை நம்பி தியேட்டர் பக்கம் ரசிகர்கள் போவார்களா? என்கிற கேள்வியும் சமீபத்தில் வந்த இறைவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் சைரன் படத்தையும் ரசிகர்கள் நம்ப மறுத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு பொங்கலுக்கே அஜித்தின் துணிவு மற்றும் வாரிசு வச்சு செய்தது போதாதா? இதில் அடுத்த வருஷம் வேறு இப்படியா? என ரசிகர்கள் இப்பவே நொந்து கொள்கின்றனர். ஏதாவது நல்ல படம் வந்து ரசிகர்களை காப்பாற்றும் என நம்புவோம்!

 

Related Articles

Next Story