Connect with us

Cinema News

பொன்னியின் செல்வனில் இதெல்லாம் வேஸ்ட்!…மணிரத்தினத்துக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபலம்.

பாகுபலி 1&2, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் 1 &2 என வெளிமாநில திரைப்படங்கள் பிரமாண்டமாக தயாராகி பெரிய வெற்றியை பெற்று வருகிறது. அதேபோல் தற்போது தமிழில் அதேபோல் பிரமாண்ட திரைப்படம் உருவாதா என்று ரசிகர்கள் ஏங்கும் போது வெளியான அறிவிப்புதான் பொன்னியின் செல்வன். அதுவும் மணிரத்னம் இயக்கத்தில்.

வழக்கமாக, கதைகளை வித்தியாசமாக கையாண்டு வரும் மணிரத்னம் முதன்முறையாக ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்குகிறார் என்றவுடன் ரசிகர்களிடம் ஆர்வம் அதிகமானது. அதேபோல் இத்திரைப்படம் 2 பாகமாக தயாராகிறது. அந்த 2 பாகத்திற்கான சூட்டிங் முடிந்து விட்டது. இந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் பாகம் அடுத்த வருடம் இரண்டாம் பாகம் என ரிலீஸ் பிளான் செய்யப்பட்டுவிட்டது.

இந்த திரைப்படத்தின் முதல் பாக வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இதற்கு முதல் பாகத்தில் எந்தெந்த காட்சிகள் வரவேண்டும் என்ற எடிட்டிங் வேலைகள் முடிந்து விட்டதாம். பின்னர் ரகுமானிடம் பின்னணி இசைக்காக படம் அனுப்பி வைக்கப்பட்டதாம்.

அப்போது பின்னணி இசை கோர்ப்பு க்காக அந்த காட்சிகளை போட்டு பார்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திருப்தி இல்லையாம். காட்சிகள் சரியாக வரவில்லை, கதைக்குரிய பிரம்மாண்டம் இதில் இல்லை என மணிரத்னத்திடமே சொல்லிவிட்டாராம் ரகுமான்.

 

இதையும் படியுங்களேன் – சட்டவிரோத பணப்பரிமாற்றம்.!? விசாரணையில் இயக்குனர் ஷங்கர்.! வெளியான திடுக் தகவல்கள்..,

எந்த படத்திற்கும் யாருக்கும் மனது நோகாமல் சொல்லும் ரஹுமானே இப்படி படத்தை பற்றி சொல்லி விட்டாரே, என்று படக்குழுவும் தற்போது கலக்கத்தில் இருக்கிறதாம். மீண்டும் அந்த காட்சியை ஷூட் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதா, இல்லை அந்த காட்சிகளை நீக்க உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பிரம்மாண்ட திரைப்படம் என்றால் பொன்னியின் செல்வன் தான். அதற்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டதே என்று தமிழ் சினிமா ரசிகர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top