ஐஸ்வர்யா ராஜேஷ் நம்பிக்கை துரோகி!.. அறிமுகப்படுத்தியதே நான்தான்.. பிரபல இயக்குநர் குமுறல்!..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை முதலில் அறிமுகப்படுத்தியதே நான் தான் என பிரபல இயக்குநர் ஒருவர் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். ஆனால், அந்த படத்திற்கு பிறகு அவர் வளர்ந்து விட்ட நிலையில், என் படத்தில் நடித்ததையே அவர் மறைத்து விட்டார் என்றும் இன்னொரு படம் அவரை வைத்து பண்ண நினைத்த போது அவர் பேசாமல் அவரது அம்மாவை வைத்து பேச வைத்து மறுத்து விட்டார் என்றும் கூறியுள்ளார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் அறிமுகமானார் என பலருக்கும் தெரியும் அவரும் அதையே தான் சொல்லி வருகிறார். எப்போதுமே வெற்றிப் பெற்ற படத்தை தான் முதல் படம் என நடிகைகள் சொல்வது வழக்கம் என ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து அவர்களும் இவர்களும் படத்தை இயக்கிய இயக்குனர் வீரபாண்டியன் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அயலானா? கோட் படமா? ஆர்ஜே பாலாஜி யாரைப்பா இப்படி போட்டு பொளக்குறாரு!.. ஓஹோ அதான் விஷயமா?..

ஆரம்பத்தில் ஆட்டோவுக்கு கூட காசு இல்லாமல் அம்மாவுடன் என் ஆபிஸுக்கு அடிக்கடி வருவார் என்றும் கண்டிப்பா நீ தான்ம்மா என் படத்துல ஹீரோயின் என்றும் சொல்லி அவரையே புக் பண்ணேன்.

என் கூட இருக்குறவங்களே அவரு ரொம்ப குண்டா இருக்கிறது பார்த்துட்டு இவங்களையெல்லாம் ஏன் ஹீரோயின் ஆக்குறாருன்னு பின்னாடி பேசினாங்க, ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்த முனைப்பு எனக்கு பிடிச்ச நிலையில் அவரை ஹீரோயினாக அறிமுகப்படுத்தினேன். ஆனால், அதன் பின் அவர் வளர்ந்து விட்ட நிலையில், என்னை அப்படியே மறந்து விட்டார் என வீரபாண்டியன் பேட்டி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித்தோட டின்னர் சாப்பிடுறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்!.. பிக் பாஸ் பிரபலம் வெளியிட்ட செம பிக்ஸ்!

 

Related Articles

Next Story