More
Categories: Cinema History Cinema News latest news

முதல் மனைவி ரமலத்தை உருகி உருகி காதலித்த பிரபு தேவா…. குறுக்க வந்து குடும்பத்தை சீரழித்த நயன்தாரா!

நடிகர், டான்சர் , இயக்குனர் என பல திறமைகளை கொண்டு சினிமாவையே ஆச்சர்யப்படவைத்தவர் பிரபு தேவா. இவருக்கு மைக்கல் ஜாக்சனின் நடனத்தின் மீது ஏற்பட்ட தாக்கத்தினால் தனது சிறுவயதிலேயே யாருக்கும் தெரியாமல் அறையை பூட்டிக்கொண்டு மைக்கல் ஜாக்சனின் கேசட் போட்டு நடனமாடிக்கொண்டு இருப்பாராம்.

Advertising
Advertising

இவரது திறமையை கண்டு வியந்த குடும்பத்தினர் அவரை திரைப்படத்துறையில் டான்சராக அறிமுகப்படுத்தினார்களாம். முதல் பாடல் அக்கினி நட்சத்திரம் படத்தில் ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலுக்கு நடனமாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் குரூப் டான்சராக இருந்துவந்த பிரபு தேவா தன்னுடன் நடனமாடிய ரமலத் என்ற இஸ்லாமிய பெண்ணை உருகி உருகி காதலித்து பெற்றோர் எதிர்ப்புகளை மீறி ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். அதில் ஒரு மகன் இறந்துவிட்டார். அப்போது பிரபு தேவா மிகுந்து வேதனைக்குள்ளாகினார். அதனால் மனைவியுடன் வாக்குவாதம் , சண்டை என ஏற்பட்டதால் அவரை விவாகரத்து செய்யவேண்டினார். அந்த சமயத்தில் யாரினும் அன்பு கிடைக்காத என ஏங்கிய அவருக்கு நயன்தாராவுடன் நல்ல நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது.

ஆனால் அவரது முதல் மனைவி கொடுத்த அழுத்தத்தினால் நயன்தாராவையும் விட்டெறிந்து பாலிவுட்டிற்கு சென்றார். அங்கு நடன இயக்குனராக இருந்து பின்னர் கஜினி இந்தி ரிமேக் படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார். அதன் பிறகு மீண்டும் முழு வீச்சில் நடனம், நடிப்பு என இறங்கியவர் மூன்றாவதாக ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

Published by
பிரஜன்

Recent Posts