ஒரு பாட்டுக்கு 300 கோடியா? இளையராஜாவே பரவாயில்ல போலயே.. பைத்தியம் முத்திரிச்சுடோய்

Ilaiyaraja: தமிழ் சினிமாவில் 70 காலகட்டத்தில் இருந்து இன்று வரை தன் இசையால் அனைவரையும் கட்டி போட்டு வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. இன்று ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே தமிழ் சினிமாவில் கட்டி வைத்திருக்கிறார். அதற்கு ஒரே காரணம் அவருடைய இசை மட்டுமே. மற்றபடி அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மிகவும் திமிர் பிடித்தவர், யாருக்கும் மரியாதை கொடுத்து பேச மாட்டார் என்றெல்லாம் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, அப்படி இருந்தால் என்ன தவறு என்றும் அவருக்கு சப்போர்ட்டாக ஒரு கூட்டம் பேசிக்கொண்டு வருகிறது, அந்த அளவுக்கு அவர் சாதனை படைத்திருக்கிறார், அதனால் அந்த அளவு கர்வமாக இருப்பதில் என்ன தவறு என்றும் ஜால்ரா தட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாக்கியராஜ் செய்த ஒரே தவறு அதுதான்!.. அதனால்தான் தோல்வி!.. இயக்குனர் கொடுத்த பேட்டி…

இந்த நிலையில் சமீப காலமாக இளையராஜா அவருடைய இசையில் அமைந்த பாடல்களை வேறு எந்த படங்களுக்கும் தன் அனுமதி இன்றி பயன்படுத்தக் கூடாது என்ற வகையில் நோட்டீசுகளை அனுப்பி வருகிறார். கூலி படத்தில் கூட இளையராஜா தரப்பில் இருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் போயிருக்கிறது. அதைப்போல மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கும் நோட்டீஸ் போயிருக்கிறது.

இதைப்பற்றி பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி இளையராஜாவுக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார். ரட்சகன், ஜோடி போன்ற படங்களை இயக்கியவர் தான் பிரவீன் காந்தி. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பொருத்தவரைக்கும் குணா படத்தில் அமைந்த கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் வரியில் இருந்து தான் படம் தொடங்குகிறது. முடியும் வரை அந்தப் பாடலில் தான் முடிகிறது.

இதையும் படிங்க: அப்படியா செஞ்சாரு கவுண்டமணி? அலும்பு தாங்கலப்பா.. ஆனா அப்புறம் நடந்தது தான் ஆச்சரியம்..!

praveen gandhi

praveen gandhi

அப்போ ஆரம்பத்திலேயே அந்தப் பாடலை வைத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விட்டனர் அந்த படக்குழு. ஒரு மூடு செட் பண்ணி விட்டு தான் படத்தையே ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் அந்த பாடல் ஒன்றே தான். அதனால் அந்தப் படத்தின் மொத்த வசூலையும் அதாவது 300 கோடியையும் இளையராஜாவுக்கே கொடுத்தாலும் தவறில்லை. அப்படி இல்லை என்றாலும் தமிழ்நாட்டில் அந்த படம் வசூலித்த 50 கோடியை யாவது இளையராஜாவுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று பிரவீன் காந்தி கூறியிருக்கிறார். இவருடைய இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பிரவீன் காந்தியை சகட்டுமேனிக்கு திட்டி வருகிறார்கள்.

 

Related Articles

Next Story