கல்யாணத்துக்கு முன்னாடி பிரேம்ஜி சொன்ன காமெடி செமயா இருக்கே...! பயில்வான் சொல்றாரு பாருங்க...

நடிகர் பிரேம்ஜி, இந்துவோட திருமணம் சமீபத்தில் தடபுடலாக நடந்தது. ஆனா ஒரு விஷயம்... இளையராஜாவுக்குக் கூட இந்தத் திருமணத்துக்கு அழைப்பு வைக்கவில்லை என்றால் அதற்கு என்ன காரணமாக இருக்கும்? இந்த திருமணத்தைப் பற்றி என்று பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

6 மாசத்துக்கு முன்னாடி பிரேம்ஜி பேட்டி கொடுக்கும்போது 'நான் எப்பவும் சிங்கிள். கல்யாணம் எனக்கு ஒர்க் அவுட்டாகாது. நான் ப்ரீ பேர்டா இருக்கேன்..'னு சீரியஸா பேசுனாரு. அது காமெடிங்கறது கல்யாணம் ஆகும்போது தான் தெரிஞ்சது.

இதையும் படிங்க... உதயநிதிக்கு பெரிய தலைவலியே விஜய்தான்! கேப்டனும் ரஜினியும் சேர்ந்த கலவை.. அசைக்க முடியுமா?

'நாங்க சிம்பிளா நடத்தணும்னு தான் நினைச்சோம். 2 பேரும் முருக பக்தர். அதனால திருத்தனியில கல்யாணம் முடிச்சோம். நான் வங்கியில் இளநிலை அதிகாரியா இருக்கேன். பேஸ்புக்ல பார்த்து தான் இவர் கொஞ்சம் வெள்ளந்தியா இருக்காருன்னு கல்யாணம் முடிச்சேன். அவருக்கு 48 வயசானாலும் அப்படி தெரியல' என்றார் அவரது மனைவி இந்து . இவர் சேலத்தைச் சேர்ந்தவர்.

பொதுவாக வீட்டுல துக்கம் நடந்தா அதை ஒரு வருஷம் அனுபவிப்பாங்க. ஆனா அதையும் மீறி சமீபத்தில் இளையராஜா விழாவில் எல்லாம் கலந்துகிட்டாரு. கோவிலுக்கு எல்லாம் போனாரு. ஆனா அவரோட பேரு அந்த இன்வட்டேஷன்ல இல்ல. அவர் வர மாட்டாருன்னு சொன்னாரான்னு தெரியல. ஆனா ஏற்கனவே கங்கை அமரனுக்கும், இளையராஜாவுக்கும் ஒரு பனிப்போர் நடந்துக்கிட்டே இருக்கு.

தன்னோட அண்ணனைக் கல்யாணத்திற்கு அழைக்காத கங்கை அமரன் இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கவில்லை. அவர் பின்னால் நின்று கொண்டு இருந்தார். வெங்கட்பிரபு தான் தந்தை ஸ்தானத்தில் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார். கங்கை அமரன் ஆசிர்வாதம் செய்தார். பிரேம்ஜி தான் சிம்புவை வல்லவன் படத்தில் அறிமுகப்படுத்தினார். வெங்கட்பிரபு அல்ல.

இதையும் படிங்க... எந்த கணவனும் இதுக்கு ஒத்துக்க மாட்டான்! பெண் ரசிகையின் செயலால் ஆடி போன மோகன்

நான் எல்லாரையும் கூப்பிடலன்னு நினைக்காதீங்க. வரவேற்பைப் பெரிய அளவில் வைக்கப்போறேன்னும் பிரேம்ஜி சொல்லியிருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story