More
Categories: Cinema News latest news

அந்த டாப் நடிகர் படத்தில் இருந்து 2 தடவை எஸ்கேப் ஆன பிரித்விராஜ்.. மனுஷனை காப்பாற்றிய ஒரே படம்!..

மலையாள திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவர் பிரித்விராஜ். தமிழிலும் பாரிஜாதம், மொழி, காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவரது திரை வாழ்வில் முக்கிய படமான ‘தி கோட் லைஃப்‘ என்ற படம் மார்ச் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் தி கோட் லைஃப்.

இந்த படத்தை காரணமாக சொல்லியே சிரஞ்சீவியுடன் இணைந்திருக்க வேண்டிய இரண்டு வாய்ப்புகளை நிராகரித்தாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் பிரித்விராஜ் கூறியுள்ளார். தெலுங்கு திரையுலக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவான படம் சைரா நரசிம்ம ரெட்டி.

Advertising
Advertising

இதையும் படிங்க: குருவை பார்த்துட்டு சிஷ்யனை பார்க்காமல் விட்டா எப்படி!.. மஞ்சுமெல் பாய்ஸ் என்ன இங்கேயே டேராவா?..

இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை சுஹாசினி மணிரத்னம் மூலம் சிரஞ்சீவி தொடர்பு கொண்டதாகவும். 10 வருடங்கள் காத்திருந்து இப்போதுதான் ஆடுஜீவிதம் நாவலை படமாக்கவுள்ளோம். அதற்காக உடல் எடையை குறைக்க வேண்டும். தாடி வளர்க்க வேண்டும் என்று கூறி தான் சைரா நரசிம்ம ரெட்டி பட வாய்ப்பை நிராகரித்ததாக நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கிய லூசிஃபர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த படத்தின் தெலுங்கில் ரீமேக் செய்யும் காப்புரிமையையும் சிரஞ்சீவிதான் பெற்றிருந்தார். லூசிஃபர் படத்த தெலுங்கில் இயக்கவும் தன்னை சிரஞ்சீவி கேட்டதாகவும் அதற்கும் தான் ஒரு மிகப்பெரிய படத்தை செய்து வருகிறேன்.

இதையும் படிங்க: இதுதான் ரியல் சில்லாக்ஸ்!.. நீச்சல் குளத்தில் இருந்து ஹன்சிகா எப்படி எழுந்து வராரு பாருங்க!..

10 வருடங்களக காத்திருந்து இப்போது தான் ஆடுஜீவிதம் என்ற நாவலை படமாக்கவுள்ளோம் என்று மீண்டும் சிரஞ்சீவியிடம் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கு சிரஞ்சீவி ஏய் சில வருடங்களுக்கு முன் கேட்டபோதும் இதே பதிலை தான் காரணம் சொன்னீர்கள் இது உண்மைதானே? என்று கேட்டார் என்றும் தான் நிச்சயம் எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நம்புகிறேன் என்றும் பிரித்விராஜ் தான் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Published by
Saranya M

Recent Posts