Cinema News
இந்த இயக்குனர் கூட ஒரு படம் பண்ணனும்…. தனது ஆசையை வெளிப்படுத்திய இளம் நடிகை….!
ஆரம்காலத்தில் செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கி அடுத்ததாக சின்னத்திரை நடிகை, தற்போது வெள்ளித்திரை நடிகை என அடுத்தடுத்து உச்சம் தொட்டு கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் தற்போது முன்னணி நடிகை பட்டியலில் முதல் இடம் நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறார்.
பார்த்ததும் பிடித்துவிடும் முகம், ஹோம்லி லுக் என தனது அழகால் ரசிகர்களை வசீகரம் செய்த பிரியா பவானி சங்கருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரியா விரைவிலேயே சோலோ நாயகியாக பிளட் மணி என்னும் படத்தில் நடித்து தனது தனித்திறமையையும் வெளிப்படுத்தினார்.
தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ள பிரியா பவானி சங்கர் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இருப்பினும் சோசியல் மீடியா பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் பேசிய இவரிடம் சிலர் வரம்பு மீறிய கேள்விகளை கேட்டனர்.
இருப்பினும் சில ரசிகர்கள் மிகவும் நல்ல கேள்விகளை கேட்டனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர் நடிகை பிரியா பவானி சங்கரிடம், எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர், “இயக்குனர் வெற்றிமாறன். நான் வெற்றிமாறனின் திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருக்க ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எதார்த்தமான தனது கதைகள் காரணமாக கோலிவுட்டில் ஒரு சூப்பர் ஹிட் இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் படத்தில் நடித்தால் விருது நிச்சயம் என்பதால் பலரும் இவர் படத்தில் நடிக்க ஆசைப்படும் நிலையில், பிரியா பவானி சங்கர் இவர் பெயரை கூறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.