ஒன்னு போட்டாலும் தரமா இருக்கு!...சைடு லுக்கில் இளசுகளை சாய்த்த பிரியா பவானி சங்கர்...

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளாராக பணிபுரிந்த போதே ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அவரது அழகில் மயங்கி அவருக்குனெ தனி ரசிகர் கூட்டமே உருவானது.
அதன்பின் நடிக்கும் வாய்ப்பு வர அவர் சினிமாவுக்கு செல்லாமல் சின்னத்திரை சீரியலை தேர்ந்தெடுத்து நடித்தார். கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானர்.
அதன்பின், மனம் மாறி ‘மேயாத மான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
இவரின் நடிப்பில் யானை, திருச்சிற்றம்பம் என சமீபத்தில் 2 படங்கள் வெளியானது. ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், புடவையில் சைடு போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.