மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் வரும் நகரத்து பெண்கள் மத்தியில் பத்திரிக்கை துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர் பிரியா பவானி சங்கர். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். அவரின் அழகில் மயங்கி அப்போதே அவருக்கென ரசிகர் கூட்டம் உருவானது.
அதன் விளைவாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வர அதை மறுத்தார் பிரியா. ஆனால், காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன்பின் மேயாத மான் திரைப்படம் மூலம் சினிமாவிலும் நுழைந்தார்.
ஆனால், அப்போது முதல் இப்போது வரை டீசண்ட்டான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அருண்விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை படம் முதல் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம், தன்னுடைய அழகிய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில்…
இளன் இயக்கத்தில்…
தமிழ்த்திரை உலகில்…
இந்தியன் 2…
Kiara advani:…