Entertainment News
எத்தனை பேர் வந்தாலும் நீதான் க்யூட்டு!…மனச சுண்டி இழுக்கும் பிரியா பவானி சங்கர்….
செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த போதே தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருந்தவர் பிரியா பவானி சங்கர். எனவே, சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார்.
அதன்பின், மேயாத மான் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அவரின் அழகு ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலகினரையும் கட்டி போட்டது. எனவே, தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்தார். கவர்ச்சி காட்டாமல் ஒரு டீசண்ட்டான நடிகையாக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களான டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.