ஏன் என்னை யாருமே ஃபோட்டோ எடுக்கல.. பிரியாமணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Actress Priyamani: ‘கண்களால் கைது செய்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரியா மணி பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். எத்தனையோ படங்களில் நடித்தாலும் பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் நெஞ்சங்களை கொள்ளையடித்த நடிகையாக மாறினார் பிரியாமணி.

அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் பிரியாமணி. மிகவும் துணிச்சலான நடிகை. எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்துவிட்டு செல்பவர். ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பிரியாமணியை பார்க்க முடிவதில்லை.

இதையும் படிங்க: ஆல் ஏரியாவிலும் அண்ணன் கில்லிடா!.. பல துறைகளிலும் கலக்கும் நடிகர்களின் லிஸ்ட் இதோ!..

அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘ஜவான்’. பேன் இந்திய திரைப்படமான வெளியான ஜவானில் பிரியாமணி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஷால் , விக்ரம், ப்ரித்விராஜ் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரியாமணி அடுத்தடுத்து ஒரு டாப் நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனால் கோலிவுட்டில் அவரை இப்போது பார்க்கவே முடியவில்லை. தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் பிரியாமணி சமீபத்தில் ஒரு சம்பவத்தை எண்ணி வருத்தப்பட்ட செய்தி வைரலாகி வருகின்றது. அதாவது நடிகைகள் ஜிம், பப், விமான நிலையம் என எங்கே சென்றாலும் அவர்களை பின் தொடர்ந்து paparazziகள் போட்டோ எடுக்க வருவார்கள்.

இதையும் படிங்க: என்னாது சமந்தாவுக்கு 23 வயசு தான் ஆகுதா?.. காலை எப்படி தூக்கி நிக்கிறாரு பாருங்க!..

ஆனால் பிரியாமணியை மட்டும் அவர்கள் போட்டோ எடுப்பதே இல்லையாம். இதைப் பற்றி பிரியாமணி தன் நண்பரிடம் ‘ஏன் என்னை மட்டும் போட்டோவே எடுக்க வருவதில்லை’ என கேட்டிருக்கிறார். அதற்கு அவர் நண்பர் ‘அந்த நடிகைகள் போட்டோ எடுக்க வரும் paparazziகளுக்கு குறிப்பிட்ட பணத்தை கொடுப்பார்களாம். அதுமட்டுமில்லாமல் தாங்கள் எங்கு போகிறோம். எங்கு இருக்கிறோம் என அந்த paparazziகளுக்கு முன் கூட்டியே அறிவித்தும் விடுவார்களாம்.அதனால்தான் அவர்கள் போட்டோ எடுக்க முண்டியடித்து வருகிறார்கள்’ என கூறியிருக்கிறார்.

இதை கேட்டதும் இது முற்றிலும் தவறு என பிரியாமணி நினைக்கவில்லையாம். ஆனால் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.

இதையும் படிங்க: அச்சச்சோ அந்த மேட்டர்!.. சிவகார்த்திகேயன் உருவ படம் எரிப்பு.. குண்டர் சட்டத்தில் கைது செய்யணுமாம்!..

 

Related Articles

Next Story