பிரியங்காவின் இரண்டாவது திருமணம்… அன்றே அவரின் அம்மாவே சொன்ன விஷயம்!

விஜய் டிவி தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே இன்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தப் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
பிரியங்கா தேஷ்பாண்டே சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு பின்னர் ஒரு தொகுப்பாளினியாக உயர்ந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கிரிஸ்பி கேர்ள்ஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பின்னர், 'அழகிய பெண்ணே', 'இசை அன்பிளக்ட்' போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அதன் பின்னர் சுட்டி டிவி, சன் மியூசிக், சன் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்கா, தனது காதலை பிரவீன் மூலம் விஜய் டிவி தொலைக்காட்சியில், தொகுப்பாளராக நுழைந்தார்.
'சினிமா காரம் காபி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கிய அவர், 'ஒல்லி பெல்லி', 'சூப்பர் சிங்கர் ஜூனியர்', 'கலக்க போவது யாரு', 'கிச்சன் சூப்பர் ஸ்டார்', 'கிங்ஸ் ஆப் டான்ஸ்', 'கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்', 'ஜோடி நம்பர் 1', 'சூப்பர் சிங்கர் 6, 7, 8, 9' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகளை காமெடியாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வழங்கி விஜய் டிவி டிடியை பீட் செய்த பிரியங்கா, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஃபர்ஸ்ட் ரன்னர் அப் ஆனார். அவரது முதல் திருமணம் கைகூடாத நிலையில், இன்று இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது திருமணம் தொடர்பாக அவரது அம்மா பேசிய விஷயங்கள் வெளியாகியுள்ளன. பிரியங்கா தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்து 15 வருடங்கள் ஆனதை சிறப்பிக்கும் விதமாக கொடுத்த பேட்டியில், பிரியங்காவின் பர்சனல் வாழ்க்கை பற்றி முதல் முறையாக அவரது அம்மா மனம் திறந்து பேசியிருப்பார்.
பிரியங்காவின் திருமண வாழ்க்கை குறித்து பேசிய அவரின் அம்மா, "பிரியங்கா ஏற்கனவே செய்த தவறை இனி செய்யக் கூடாது. அடுத்து அவர் சரியான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அந்த வாழ்க்கையில் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் ஏற்கனவே செய்த ஒரு தவறால் நான் ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன். இனி அது நடக்காது என்று நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.
தற்போது அவரின் அம்மா கூறியபடியே இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இனியாவது அம்மா சொன்னது போலவே சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.