Categories: latest news

அழகான ராட்சசி நீ!… க்யூட்டா போஸ் கொடுத்து மனதை அள்ளிய பிரியங்கா…

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிரியங்கா மோகன். சில தெலுங்கு படங்களில் நடித்தார். அட அம்மணி அழகா இருக்காரே என நினைத்த சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தில் அவரை நடிக்க வைத்தார்.

அவரின் அழகு மற்றும் நடிப்பு தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது. அதோடு, டாக்டர் படத்தில் நடிக்கும் போதே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. இந்த படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி விட்டது.

டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது. எனவே, இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா