நீயெல்லாம் நடிகனா இருக்கவே லாயக்கு இல்ல!.. யோகிபாபுவை பொளந்த தயாரிப்பாளர்..

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், சூரி போன்றவர்கள் காமெடி நடிகர்களாக நடிப்பதில்லை என்பதால் யோகிபாபுவுக்கு அதிக மவுசு இருக்கிறது. சந்தானமும், சூரியும் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்போம் என சொல்லிவிட்டதால் இப்போது கோலிவுட்டில் காமெடி பஞ்சம் நிலவுகிறது.
சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர்தான் யோகிபாபு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சியில் கும்பலில் ஒருவராக நின்று ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பளம் வாங்கியவர்தான் யோகி பாபு. வடிவேலு அதிகம் நடிக்காத நிலையில், சந்தானமும், சூரியும் இல்லாத நிலையில் வேறு வழியில்லாமல் எல்லா தயாரிப்பாளர்களும் யோகிபாபுவை கூப்பிட வேண்டிய நிலையில் இருக்கிறார்.
இதைப்பயன்படுத்தி தனது மொக்கை காமெடிகளை வைத்து காசு சம்பாதித்து வருகிறார் யோகி பாபு. அதுவும், கவுண்டமணி ரேஞ்சுக்கு ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளம் வேண்டுமென கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் இவர் காமெடிக்கு தியேட்டரில் யாரும் சிரிப்பதே இல்லை. காமெடி என நினைத்து ஏதோ வாய்க்கு வந்ததை பேசி பொழப்பை ஓட்டி வருகிறார் யோகி பாபு.
வடிவேலு ஸ்டைலில் பல படங்களில் கதையின் நாயகனாக நடித்து பார்த்தார் யோகிபாபு. ஆனால், அதில் பாதி படங்கள் வெளியாகவே இல்லை. வெளியான படங்களும் ஓடவில்லை. அதில், மண்டேலா படம் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்போது யாரும் இல்லை என்பதால் பெரும்பாலான படங்களில் யோகிபாபுவே நடித்து வருகிறார்.
இந்நிலையில்தான், யோகிபாபுவை ஒரு தயாரிப்பாளர் கண்டபடி திட்டியிருக்கிறார். ராஜா என்பவர் கஜானா என்கிற படத்தை தயாரித்துள்ளார். அட்வென்ச்சர் ஃபேண்டஸி படமாக கஜானா உருவாகியுள்ளது. இந்த படத்தில் இனிகோ பிரபாகர் கதாநாயகனாக நடிக்க வேதிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், இவர்களுடன் யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறர்கள்.

இந்த படம் வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜா ‘இந்த படத்தின் புரமோஷனுக்கு வரவேண்டுமென்றால் 7 லட்சம் தனியாக கொடுக்க வேண்டும் என யோகிபாபு கேட்டார். நான் கொடுக்கவில்லை என்பதால் இந்த விழாவுக்கு அவர் வரவில்லை. ‘உனக்கெல்லாம் நடிகனாக இருக்கவே தகுதி இல்லை’ என யோகிபாபுவை கோபமாக திட்டினார்.