இதை விட வேற இன்பம் கேட்குதா? தனுஷ் - ஐஸ்வர்யாவை பொளந்து கட்டும் கே.ராஜன்

Dhanush Aishwarya Rajinikanth: இன்று திரையுலகினருக்கே பேரதிர்ச்சியாக இருப்பது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து விஷயம்தான். அதற்கு காரணம் ஒரு பெரும் குடும்பங்களில் இருந்து வந்த வாரிசுகள் இப்படி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுவது என்பது அவர்கள் சார்ந்த ரசிகர்களுக்கு ஒரு தவறான வழியை காட்டுவதாக அமையும் என்ற அடிப்படையில் தான் இன்று இது சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் எதையும் தைரியமாக உள்ளதை உள்ளபடியே பேசும் தயாரிப்பாளரான கே. ராஜன் இந்த விஷயத்தை மட்டும் சும்மா விட்டு வைப்பாரா என்ன? ஏற்கனவே தனுஷை பற்றி பல பேட்டிகளில் பொளந்து கட்டிய கே.ராஜன் இப்போது இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளார். இவர்கள் விவாகரத்து தமிழ் நாட்டுக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் செய்யும் துரோகம் என்று கே. ராஜன் கூறினார்.

இதையும் படிங்க: படத்துல மட்டும் இப்படி காட்டினா எல்லாரும் காலி!. சமந்தாவை ரிப்பீட் மோடில் ஜூம் பண்ணி ரசிக்கும் புள்ளிங்கோ!..

அதுவும் இவர்களை பின்பற்றும் ரசிகர்கள் இவர்கள் விவாகரத்தையும் ஒரு ஒரு பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு ரசிகர்களும் அதை பின்பற்றினால் நாட்டில் நிலைமை என்ன ஆகும்? இதை கொஞ்சம் கூட யோசிக்கமாட்டாங்களா? ஆண் சிங்கங்களை போல் இரு மகன்களை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது இவர்கள் முடிவை மாற்றிக் கொள்ளக் கூடாதா?

இதைவிட வேறு இன்பம் என்ன வேண்டுமாம்? மனைவியை விட்டு வேறொரு பெண்ணை நாடுவது, பல பேரிடம் உறவு வைத்திருப்பது என்பது நல்லாவா இருக்கு? ஐஸ்வர்யா எப்படி என தெரியவில்லை.ஆனால் ஐஸ்வர்யாவும் சில சமயங்களில் அப்படித்தான் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலேயே தலைசிறந்த நடிகர் ரஜினி. நாகரீக வாழ்க்கையை பக்தி பரவசத்தை நாட்டு மக்களுக்கு சொல்லி ஒழுக்கத்தை வளர்க்கிறவர் ரஜினிகாந்த். அவர் மனம் என்ன பாடுபடும்?

இதையும் படிங்க: பக்கா மாஸ்டர் ப்ளான்! சூரி – விஷ்ணுவிஷால் இணைந்ததுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

ரஜினி பல முறை பேசியும் இருவரும் கேட்கவில்லை. அதனால் ரஜினியும் இப்போது இந்த விஷயத்தை பற்றி பேசுவதில்லை. ஆனால் ஒரு சில நல்ல ஜீவன்கள் தனுஷ் ஐஸ்வர்யாவிடம் பல முறை பேசிவிட்டார்கள். ஆனால் அவர்கள் அதை காது கொடுத்து கேட்கவில்லை. ஆனால் பொது வெளியில் மகன்களின் பள்ளி விளையாட்டு போட்டியில் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டது எல்லாம் போலி வாழ்க்கை. சினிமாவில்தான் நடிக்கிறார்கள் என்றால் நிஜத்திலும் நடிக்கத்தான் செய்கிறார்கள் என தனது பெரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கே. ராஜன்.

 

Related Articles

Next Story