Connect with us

Cinema News

கமல் ரசிகர்களை ஜெயிலுக்கு அனுப்பிட்டேன்., ஜாக்கிரதை.! மேடையிலேயே மிரட்டிய பிரபல தயாரிப்பாளர்.!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் வினியோகஸ்தர் கே.ராஜன் அவர்களை தெரியாதவர் வெகுசிலரே. அந்த அளவுக்கு தனது முகத்தை தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆழமாகப் பதித்து விட்டார் இவர். தற்போது நடிகர் அல்ல, தயாரிப்பாளரும் அல்ல, ஆனால் தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருந்த அனுபவசாலி.

இப்படி தனது அனுபவங்களை பல மேடைகளிலும் பல்வேறு இன்டர்வியூகளிலும் தெரிவித்து வருகிறார். அப்படித்தான் ஒரு பொது மேடையில் பேசுகையில், ரசிகர்களுக்கு தனது கண்டனங்களை தெரிவித்தார்.

இவர் தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருக்கும் மூத்த அனுபவசாலி என்பதால், பல்வேறு சினிமா விஷயங்களை வெளிப்படையாகவே கூறி விடுவார். அதற்கு என்ன விளைவு வரும் என்பதை பற்றி யோசிக்க மாட்டார். அதன் காரணமாக இவருக்கு அந்தந்த ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பும் வரும்.

இதையும் படியுங்களேன் – எடிட்டர் ரூமில் நடந்த ரேப் சம்பவம்.! அது அந்த இயக்குனரின் மேஜிக்காம்.!? 44 வருடம் கழித்து வெளியான ரகசியம்.!

இதுபற்றி அவர் கூறுகையில் என்னை நீங்கள் தாக்க நினைத்தாலோ அல்லது ஏதேனும் செய்ய நினைத்தாலும் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். ஏனென்றால் இதற்கு முன்னர் இப்படி கமல் ரசிகர்கள் சிலர் என்னிடம் செய்து, நான் உடனே அவர்களை போலீஸில் பிடித்துக் கொடுத்துவிட்டேன். பின்னர் போலீசார் அவர்களை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டனர்.

அந்த சமயம் கமல்ஹாசன் வந்து அவர்களை காப்பாற்றவில்லை. நானே ஜாமீன் எடுத்து அவர்களை விடுவித்தேன். அதனால் என்ன செய்ய நினைத்தால், மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று பொது மேடையிலேயே பகிரங்கமாகக் கூறினார். இவர் அவ்வப்போது தமிழ் சினிமாவில் நடக்கும் சம்பவங்களை, தனது அனுபவங்களை வெளிப்படையாக தொடர்ந்து கூறி வருகிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top