Connect with us

Cinema News

இயக்குனர் பா.ரஞ்சித்தின் பின்னணியில் கோடிக்கணக்கான சிங்கப்பூர் பணம்.. பகீர் கிளப்பும் பின்னணி…

அட்ட கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய தரமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனராக வலம் வருகிறார் இயக்குனர் பா.ரஞ்சித் .

இவர் தனது கருத்தியல்களை தான் இயக்கும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், தனது நீலம் பட தயாரிப்பு நிறுவனம் மூலமாகவும் புது இளம் இயக்குனர்கள் மூலமும் தனது கருத்தியல்களுக்கு ஒத்து போகும்  நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

இவர் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர் ஆகிய படங்களை தயாரித்து இருக்கிறார். மேலும், அண்மையில் சேத்துமான் படத்தை தயாரித்து இருந்தார். ஊர்வசி முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஜே.பேபி எனும் படத்தையும் தயாரித்துள்ளார்.

இதையும் படியுங்களேன்  – எங்க ஆத்தா மீனாட்சி உங்கள குணப்படுத்துவாள்.. நம்ம கேப்டனுக்காக சூரி போட்ட வைரல் பதிவு..

இப்படி வரிசையாக படங்கள் தயாரித்து வருகிறாரே இதற்கு பணம் எங்கிருந்து வருகிறது பல கேள்விகள் சினிமா உலகில் எழுந்து வந்தது. அதற்கு விடையாக அண்மையில் பிரதான சினிமா பத்திரிக்கை தளமான வலைப்பேச்சு இணையதளத்தில் பகிர்ந்து கொண்ட தகவல் என்னவென்றால்,

சிங்கப்பூரில் பா.ரஞ்சித்தின் நண்பரும் தொழிலதிபருமான ஒரு நபர் இருக்கிறாராம். அவரிடம் பைனான்ஸ் வாங்கி தான் பா.ரஞ்சித் அடுத்ததடுத்து படங்களை தயாரித்து வருகிறாராம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top