10 கோடி கேட்டயே.. இப்ப உன் நிலைமை என்னாச்சி?!. அசோக் செல்வனை பொளந்த தயாரிப்பாளர்!…

ashok selvan
சூது கவ்வும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் அசோக் செல்வன். பிசா 2, தெகிடி போன்ற திரைப்படங்கள் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். இதில் தெகிடி அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. அதன்பின் கூட்டத்தில் ஒருவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அதேநேரம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் அசோக் செல்வனுக்கு சூப்பர் ஹிட் அடித்து அவரை மார்க்கெட் உள்ள ஒரு ஹீரோவாக மாற்றியது. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்திருந்தார். காதல் கலந்த காமெடி படமாக இப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
அதன்பின் சில படங்களில் நடித்தாலும் சரத்குமாருடன் இணைந்து நடித்த போர்த்தொழில் படமும் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது. ஒருபக்கம் பல மொக்கை படங்களிலும் அசோக் செல்வன் நடித்தார். அவை எல்லாமே தோல்விப்படங்களாக அமைந்தது. இவரின் நடிப்பில் வெளிவந்த சபாநாயகன், பொன் ஒன்று கண்டேன், எனக்கு தொழில் ரொமான்ஸ் போன்ற படங்கள் ஓடவில்லை.

இப்போது மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, கமல் நடித்துள்ள தக் லைப் படத்திலும் அசோக் செல்வன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது. அசோக் செல்வன் நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கஜானா என்கிற படத்தின் டிரெய்லர் விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராஜா ‘ஒரு படம் ஹிட்டாச்சுன்னா இன்னைக்கு இருக்கும் ஹீரோக்கள் 50 லட்சம் கொடு, 1 கோடி கொடு, 5 கோடி கொடு என கேட்பார்கள். ஆனால், அசோக் செல்வன் எனக்கு தொழில் ரொமான்ஸ் படத்திற்கு முன்னாடி 10 கோடி கேட்டாரு. இப்ப அவருக்கு ஒரு கோடி கொடுக்க கூட ஆள் இல்லை’ என கோபமாக பேசியிருக்கிறார். இதே தயாரிப்பாளர்தான் 7 லட்சம் பணம் கொடுக்கவில்லை என்பதால் இந்த படத்தின் புரமோஷனுக்கு யோகிபாபு வரவில்லை. அவருக்கு நடிகராக இருக்கவே தகுதி இல்லை’ என பேசியிருந்தார்.