ஓவரா பண்ணக்கூடாது!.. அமீர் மட்டும் நினைச்சிருந்தா!. ஞானவேல் ராஜாவை பொளந்துகட்டும் தயாரிப்பாளர்..

Ameer: சினிமாவில் எந்தவொரு திரைப்படம் உருவாகும்போதும் சில சில பிரச்சினைகள் இருப்பது இயல்பே. ஆனால் சில பிரச்சினைகள் அதையும் மீறி பல வருடங்களாகவே நடக்கின்றன. அப்படிபட்ட பிரச்சினைதான் சமீபத்தில் வெடித்த அமீர்-ஞானவேல்ராஜா இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினை.

சூர்யா நடிப்பில் வெளியான மெளனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானவர் அமீர். இப்படமே இவருக்கு நல்ல ஒரு பெயரை வாங்கி தந்தது. இதன்பின் இவர் இயக்கிய திரைப்படமான பருத்திவீரன் திரைப்படம் இவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் வாசிங்க:ஷாலினி சொன்ன ஒரு வார்த்தை!.. முரட்டு கோபக்காரரான அஜித் சாதுவாக மாறிய அந்த சம்பவம்!.

இப்படத்தை முதலில் ஞானவேல் ராஜா தயாரித்ததாகவும் பின் இடையிலேயே இவர் படத்தை விட்டு விலகியதாகவும் அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்களும் தெரிவித்திருந்தனர். அதன்பின் இருந்த மீதி படங்களை அமீர் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிதான் முடித்தார் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அமீருக்கு ஆதரவாக நடிகர் சமுத்திரக்கனி, சசிகுமார் போன்ற பிரபலங்களும் தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தனர். அமீர் மீதி படங்களை இயக்க சமூத்திரக்கனி, சசிகுமார் போன்றவர்கள்தான் பண உதவி செய்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

இதையும் வாசிங்க:வாடிவாசல் படத்திலிருந்து விலகும் அமீர்?.. இதற்கு பின்னால் இருக்கும் அந்த நடிகர்!…

தற்போது தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் அமீர் மிகச்சிறந்த படைப்பாளி எனவும் அவர் நினைத்திருந்தால் ஞானவேல் ராஜா கொடுத்த பணத்தை தான் உபயோகித்து கொண்டு படத்தை அப்படியே நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதாலும் கார்த்தி போன்ற புதுமுக நடிகர் தன்னால் வளர வேண்டும் என்பதால் அப்படத்தை கடன் வாங்கியாவது தொடர்ந்து இயக்கி முடித்தார் என தெரிவித்திருந்தார்.

மேலும் இன்று அவர் சூர்யா கார்த்தியை வைத்து அடுத்த படம் இயக்கினாலும் அப்படம் வெற்றிப்படமாக அமையும் எனவும் அவர் கூறியிருந்தார். மேலும் பல திரைப்படங்களை தயாரித்த ஞானவேல்ராஜா தற்போது இப்படி அமீரைபற்றி புகார் கொடுப்பது நன்றாக இல்லை எனவும், மேலும் அமர்ந்து பேசி முடிக்க வேண்டிய இப்பிரச்சினையை வீணாக பெரிய பிரச்சினையாக மாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பருத்திவீரன் படம் அமீரின் கையிலிருந்து ஞானவேல் ராஜாவுக்கு போனபோது தயாரிப்பாளர் சங்கத்தில் சிவசக்தி பாண்டியன் முக்கிய பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க:இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு!. அலைபாயுதே ஸ்டைலில் பிட்டு போட்டு ஷாலினியை கவுத்த அஜித்…

Related Articles
Next Story
Share it