Connect with us

Cinema News

மீண்டும் புஷ்பாவில் விஜய் சேதுபதி.?! உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா.?! கதறும் ரசிகர்கள்….

எப்படிப்பட்ட கதாபாத்திரம், எந்த மொழி, எதுவாகினாலும் பரவாயில்லை அதில் நான் சிறந்து விளங்குவேன் என்று தனது ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கதாபாத்திர தேர்வின் மூலமும் நிரூபித்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஹீரோவாக நடித்தாலும் சரி, வில்லனாக நடித்தாலும் சரி தனது நடிப்பு முத்திரையை பலமாக பதித்து வருகிறார்.

அதன் காரணமாகத்தான் இவருக்கு வாய்ப்புகள் மொழிகள் கடந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. தற்போது பாலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். அதுவும் முன்னணி இயக்குனர், நட்சத்திரங்களோடு…

அதுபோல் தெலுங்கில் ஏற்கனவே மிரட்டும் வில்லனாக உப்பன்னா எனும் திரைப்படத்தில் கீர்த்தி செட்டிக்கு அப்பாவாக நடித்த மிரட்டி இருந்தார். அதன் பின்னர் உடனே புஷ்பா முதல் பாகத்தில் வில்லனாக நடிக்க இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து வில்லனாக வேண்டாம் என்று அப்போது அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகி விட்டார்.

அதன் பின்னர் தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பகத் பாசில் ஆகியோர் வில்லன்களாக புஷ்பாவில் களமிறங்கினர். தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் அதைவிட பிரமாண்டமாக தயாராக உள்ளது.

இதையும் படியுங்களேன் – அடிச்சான் பாரு கமல்ஹாசன் ஒரே அடி.. அவன் தான் நம்பர் 1.! உணர்ச்சிவசப்பட்ட சர்ச்சை நடிகர்…

இதில் முதல் பாகத்தை தவறவிட்ட விஜய் சேதுபதிக்கு மீண்டும் வாய்ப்பு கதவு தட்டுகிறது. அதுவும் இந்த புஷ்பா இரண்டாம் பாகத்தில் சேதுபதிக்காக தனியாக ஒரு போலீஸ்  வில்லன் கதாபாத்திரம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அதேபோல பகத் பாசில் ஏற்கனவே போலீஸ் வில்லனாக அதில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி புஷ்பா இரண்டாம் பாகத்தில் களமிறங்கினால், புஷ்பா இரண்டாம் பாகத்திற்கு தமிழில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்பது தற்போது பலரின் கருத்தாக இருக்கிறது. எல்லாம் இது சேதுபதி கையில்தான் இருக்கிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top