டெல்லியில் பிறந்து வளர்ந்து அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர் ராஷி கண்ணா. பாடகி ஆகவேண்டும் என முதலில் ஆசைப்பட்ட ராஷி கண்ணா அதற்கான பயிற்சியும் எடுத்தார். அதன்பின் கலெக்டர் ஆக வேண்டும் எனவும் ஆசைப்பட்டார். ஆனால், இரண்டுமே நடக்கவில்லை.

அதற்கு காரணம் மாடலிங் துறை பக்கம் அவரின் ஆர்வம் திரும்பியதுதான். கல்லூரி படிப்புக்கு பின் விளம்பர படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆர்வமும் வரவே பாலிவுட்டில் முயற்சிகள் செய்தார். ஆனால், வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் போனார்.

அது அவருக்கு கை கொடுத்தது. நிறைய படங்களில் நடித்தார். கோலிவுட் இயக்குனர்களின் கண்ணில் படவே அப்படியே தமிழ் சினிமாவுக்கும் வந்தார். இவர் அறிமுகமான படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின் தமிழில் தொடர்ந்து நடிக்க துவங்கினார்.

அடங்க மறு, சங்கத்தமிழன் என சில படங்களில் நடித்தார். தனுஷுன் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்திருந்தார். இப்போது சுந்தர் சியின் இயக்கத்தின் ரசிகர்களை மிரட்டவரும் அரண்மனை 4 படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

ஒருபக்கம், சினிமாவில் காட்டாத கவர்ச்சியை போட்டோஷூட்டில் காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகின்றார். இந்நிலையில், உள்ளாடை ஏதும் அணியாமல் வெளியே கோட் மட்டும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.


முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com





