More
Categories: Cinema News latest news

விஜய்சேதுபதி பட டைட்டிலை மகேஷ் பாபுவுக்காக ஆட்டையை போட்ட ராஜமெளலி?.. அட இதுதான் டைட்டிலா?..

ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர்களையே அள்ளிய நிலையில், ராஜமெளலி இன்னும் தனது அடுத்த பட ஷூட்டிங்கை ஆரம்பிக்கவில்லை. மகேஷ் பாபுவை வைத்து தான் ராஜமெளலி அடுத்து படம் எடுக்கப் போகிறார். அதற்காக கடந்த 2 ஆண்டுகளாக தனது படத்துக்காக மகேஷ் பாபுவை பிசிக்கலாகவும் மென்டலாகவும் தயார் படுத்தி வருகிறார்.

மகேஷ் பாபு நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவி வருகின்றன. இந்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியான குண்டூர் காரம் படமும் அட்டு ஃபிளாப் ஆகி விட்டது. இந்நிலையில், டோலிவுட் நடிகர்களான பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோரை தூக்கி விட்டது போல மகேஷ் பாபுவையும் தூக்கி விட ராஜமெளலி முயற்சித்து வருகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: லக்கேஜ் தூக்க மட்டும் தான் நீ லாயக்கு!.. வேலைக்கார பெண்ணை துரத்திவிடும் ரஜினிகாந்த்.. ஷாக்கிங்!..

விரைவில் அந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப் போவதாக அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. மேலும், இந்த படம் பான் வேர்ல்ட் ரீச் இருக்கும் என்பதால், இந்தோனேஷியாவில் இருந்து ஹீரோயினை இறக்க ராஜமெளலி திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர். மேலும், வெளிநாட்டு வில்லன்களையும் மகேஷ் பாபுவுக்காக களமிறக்க உள்ளார் என்கின்றனர்.

இந்நிலையில், ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள படத்திற்கு மஹா ராஜா என்கிற டைட்டிலை முடிவு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதையும் படிங்க: இது சமாதி இல்லை சன்னதி!..ரஜினிக்கு தாஜ்மகால்.. வடிவேலு கோயிலாகவே மாத்திட்டாரே!.. அங்க போகலையா?

விஜய்சேதுபதி தற்போது மகாராஜா எனும் டைட்டிலில் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதியின் பட டைட்டிலை மகேஷ் பாபு படத்துக்கு ராஜமெளலி வைக்கப் போறாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

Published by
Saranya M

Recent Posts