ராஜமவுலியின் கனவு படத்தில் அந்த ஹீரோ!.. அட அவரே சொல்லிட்டாரே!…..

by சிவா |   ( Updated:2025-04-28 03:12:20  )
ராஜமவுலியின் கனவு படத்தில் அந்த ஹீரோ!.. அட அவரே சொல்லிட்டாரே!…..
X

rajamouli

தமிழில் ஷங்கர் போல தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனராக பார்க்கப்படுபவர் ராஜமவுலி. ஆனால், ஷங்கருக்கும், ராஜமவுலிக்கும் இடையே உள்ள வித்தியாசம என்னவெனில் ராஜமவுலியின் படத்தில் கதைக்கு தேவையான பிரம்மாண்டம் மட்டுமே இருக்கும். துவக்கத்தில் இவரும் சாதாரண மசாலா படங்களைத்தான் எடுத்து வந்தார்.

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் அறிமுகமான மஹதீரா படத்தின் மூலம் வேறு மாதிரி படங்களை இயக்கும் இயக்குனராக மாறினார். இந்த படத்தின் மேக்கிங் தெலுங்கு சினிமாவை ஆச்சர்யப்பட வைத்தது. அடுத்து ஒரு ஈ பழிவாங்குவது போல ஒரு கதையை உருவாக்கினார். அப்படி உருவான நான் ஈ படத்தில் நானி, சமந்தா, சுதீப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த படமும் ஹிட் அடிக்கவே அடுத்து ராஜமவுலி இயக்கிய படம்தான் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா, சத்தியராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், ராணா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான இப்படம் 2 பாகங்களாக வெளிவந்து வசூலை அள்ளியது. இந்தியாவில் பல மொழிகளிலும் வெளியாகி ஹிட் அடித்து பேன் இண்டியா என்கிற கான்செப்டை உருவாக்கியதே இந்த படம்தான்.

பாகுபலி 2 படம் உலகம் முழுவதும் சேர்த்து 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அதன்பின் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார். இந்த படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவானது. அசத்தலான ஆக்‌ஷன் காட்சிகள் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. அதோடு, இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

இந்த படத்திற்கு பின் இப்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், நானியின் ஹிட் 3 படம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய ராஜமவுலி என் கனவுப்படமான மகாபாரதத்தில் நானி நடிப்பார் என உறுதி செய்திருக்கிறார். அப்போது அங்கிருந்த நானியின் ரசிகர்கள் கைத்தட்டி உற்சாகம் அடைந்தனர்.

மகாபாரத்தை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. அது என் கனவு படமாக இருக்கும். ஆனால், அந்த படத்தை உருவாக்க அதிக பட்ஜெட் தேவைப்படும் என ராஜமவுலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story