More
Categories: Cinema News latest news

பாகுபலி இயக்குனரை தட்டி தூக்கிய புஷ்பா.! அப்போ சூப்பர் ஸ்டார் நிலைமை.!?

பாகுபலி 1&2 எனும் பிரம்மாண்ட திரைப்படங்களை கொடுத்து இந்திய சினிமாவை உலக அளவிற்கு எடுத்து சென்ற பெருமைக்குரியவர் இயக்குனர் ராஜமௌலி. இவர் அடுத்து அடுத்து என்ன படம் இயக்க போகிறார்? யாரை ஹீரோவாக வைத்து எடுக்கிறார்? என்று இந்திய சினிமாவே உற்று நோக்குகிறது.

Advertising
Advertising

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இவர் கால்ஷீட் கேட்டால் எவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், தனது படங்களை ஒதுக்கிவிட்டு இவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதே தற்காலத்து உண்மை.

இவர் இயக்கத்தில் வரும் 25ம் தேதி RRR திரைப்படம் உலகம் முழுக்க பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன், ஆலியா பட், தமிழில் இருந்து சமுத்திரகனி என உண்மையான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை அடுத்து ராஜமௌலி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படம் காடுகளில் நடக்கும் கதைக்களமாக உருவாக உள்ளது.

இதற்கிடையில் நேற்று வெளியான செய்தி என்னவென்றால், புஷ்பா படத்தின் மூலம் இந்தியா முழுக்க தெரிந்து நடிகராக உள்ளார் அல்லு அர்ஜுன். இவர் அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் நேற்று வெளியானது. இது கிட்டத்தட்ட உண்மை என்கிற நிலையில்தான் இருந்தது.

இதையும் படியுங்களேன் – இசை வெளியீட்டு விழா இல்லை.! ஆனால் தளபதி விஜய் வேற பிளான் வைச்சிருக்கார் தெரியுமா.!?

அப்படியென்றால் ராஜமௌலி அடுத்ததாக மகேஷ்பாபு படத்தை இயக்கவில்லையா என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். பிறகுதான் தெரிந்தது முதலில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, 2023 இல் தான் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க தயாராக உள்ளார் இயக்குனர் ராஜமௌலி.

விரைவில் அடுத்தடுத்து ராஜமௌலி இயக்கும் அடுத்த திரைப்படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Manikandan

Recent Posts