பார்க்கத்தான போற காளையோட ஆட்டத்த! அடுத்தடுத்து குறிவைத்து தாக்கும் ரஜினி – 170ல் இப்படி ஒரு டிவிஸ்டா?

Published on: August 2, 2023
rajini
---Advertisement---

ஜெய்லர் படத்தை முடித்த கையோடு லால் சலாம் படத்திலும் ரஜினி நடித்துக் கொண்டு வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்புகளும் ஓரளவு முடிவடையும் நிலையில் அடுத்ததாக ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் இணைந்து பணியாற்ற போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

ஏற்கனவே தனது 170 ஆவது படத்தை லோகேஷை வைத்து இயக்க வேண்டும் என்ற ஆசையில் ரஜினி இருந்தார். ஆனால் ஜெயிலர், லால் சலாம் படத்திற்கு பிறகு ஞானவேலுவுடன் இணையப் போகிறார் என்று தான் அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க : சூடு கண்ட பூனையாக மாறிய நெல்சன் – விஜயை வச்சு பட்டதே போதும்! அலார்ட்டா இருக்காருய்யா

இந்த நிலையில் மிகுந்த கொலை வெறியுடன் தனது கோபத்தை வெளி காட்டிக் கொண்டு வருகிறார் ரஜினி. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து எழுந்த சர்ச்சைகளால் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தன்னுடைய மொத்த ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்தார்.

அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே ஒரு மேடையில் குதிரை கதையை சொல்லி அந்த குதிரை மீண்டும் எழுந்து ஓடும் என்ற அளவுக்கு தன்னுடைய வேதனைகளை சிரித்த முகத்துடன் சொல்லிக் காட்டினார். தன்னை மறைமுகமாக தாக்கும் பிரபலங்களை நேரம் பார்த்து தாக்கும் மனப்பான்மை கொண்டவராகவே ரஜினியை இப்போது பார்க்கப்படுகிறார்.

இந்த நிலையில் இவரைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு சமீபத்தில் ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதாவது சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிவடைந்து விட்டது என்ற வரியோடு ஆரம்பித்து வசூலில் யார் முதலில் இருக்கிறார்களோ அவர்கள்தான் இனிமேல் சூப்பர் ஸ்டார் என்பது போன்ற தனது கருத்தை பகிரங்கமாக தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க : விஜய்க்கு எதிரா பாட்டெழுதி எல்லாம் போச்சு! அஜித்தால் வாழ்க்கையை தொலைத்த பிரபலம்..

அவரை பலி வாங்குவதற்காகவே தன் அடுத்த படத்தை ஞானவேலுவை வைத்து இல்லாமல் லோகேஷை வைத்து ரஜினி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் லோகேஷன் எதிர்பார்த்து எஸ் ஆர் பிரபு கைதி 2 படத்தை எடுத்து முடித்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கிறார் .அதை நடக்க விடக்கூடாது என்பதற்காகவே ரஜினி இந்த முடிவை எடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன பிறகு இமயமலை செல்லும் ரஜினி அந்த பயணம் முடிந்து திரும்பும் போது லோகேஷ் உடன் தான் இணைவார் என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.