More
Categories: Cinema News latest news

‘ஜெயிலர்’ வெற்றியால் துள்ளும் ரஜினி! கண்ட்ரோல் முழுக்க அவர்தான் – ரஜினி170ல் மாட்டிக்கிட்டு முழிக்கும் ஞானவேல்

Rajini 170: ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏன் இந்தளவுக்கு வெற்றியை பெறும் என ரஜினியே நினைத்திருக்க மாட்டார். அவர் எதிர்பார்த்தது லோகேஷுடன் இணையும் படம் பெரிய அளவில் வரவேண்டும் என்பதுதான்.

ஆனால் ஜெயிலர் வெற்றியை விட அதிகமாக லோகேஷால் கொடுத்திட முடியுமா என்ற சந்தேகம் லியோ ரிலீஸான பிறகு அனைவருக்கும் இருக்கும் கேள்வியாக பார்க்கப்படுகிறது. இப்போது ரஜினி ஜெய்பீம் இயக்குனர் த.ச.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஒன்னு ஒன்னா கிழிக்க வேண்டாம்! மொத்தமா கிழிச்சா போதும் – லியோ பட தயாரிப்பாளருக்கு வாய் பூட்டு போட்ட தளபதி

அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படத்தில் ரஜினியுடன் மஞ்சு வாரியார், பகத் பாசில் , அமிதாப் பச்சன் போன்ற முக்கிய பிரபலங்களும் நடிக்கின்றனர். இந்தப் படமும் ஒரு பேன் இந்தியா படமாக உருவாக இருக்கிறது.

ஜெய்பீம் படத்தை போன்றே இந்தப் படமும் ஒரு கருத்துள்ள படமாக உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டுதான் உருவாகிக் கொண்டிருக்கிறதாம். முதலில் படத்தில் அமிதாப் இல்லை என்றுதான் முடிவு செய்திருந்தார்களாம்.

இதையும் படிங்க: சாரி நான் இமயமலைக்கு போகணும்!. ரஜினியை தடுத்து ஒரே நாளில் எடுத்த பாட்டு!.. அட செம ஹிட்டு!…

ஆனால் ரஜினி சொன்னதின் பேரில் தான் அமிதாப் இந்தப் படத்திற்குள் வந்தார் என்று சொல்லப்படுகிறது. அதனால் முதலில் நடிக்க இருந்த நடிகருக்கு ஏற்றவாறுதான் அந்தக் கதாபாத்திரம் இருந்திருக்கிறது. அமிதாப் வந்த பிறகு அவருக்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றி அமைக்க சொல்கிறாராம் ரஜினி.

அமிதாப் கதாபாத்திரத்திற்கு என்று இல்லாமல் மொத்தமாக கதையிலும் குறுக்கிடுவதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. ரஜினி அவ்வாறு செய்யக்கூடியவர் இல்லையே என்று சொன்னாலும் எல்லாம் ஜெயிலர் வெற்றிதான் செய்யவைக்கிறது என்றும் ஒரு சில பேர் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: தேசிய விருது இயக்குனருக்கே நோ சொன்ன தளபதி..! அது ஒன்னு இல்ல இரண்டு முறையாம்.. ஏன் பாஸ்..?

Published by
Rohini

Recent Posts