முத்தத்தால் மொத்த கதையையும் முடித்த இயக்குனர்.. ரஜினி படத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?

rajini
Rajini: ஒரு முத்தத்திற்கு இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா என அனைவரையும் வியக்க வைத்தது ரஜினியின் ஒரு படம். ஏற்கனவே முத்து படத்தில் ரஜினி மற்றும் மீனா இடையில் ஒரு முத்தத்தை வைத்து தான் காதலை சொல்லி இருப்பார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். அதேபோல் தான் படையப்பா படத்தில் ஒரு முத்தம் எப்படி எல்லாம் அந்த கதை முழுக்க பெரும் முக்கியத்துவம் பெற்றது என்பதை தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம்.
படத்தின் ஆரம்பக் காட்சியே முத்தத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். ரஜினி பாம்புக்கு முத்தம் கொடுத்து தான் தன்னுடைய அறிமுகத்தையே வெளிப்படுத்துவார் .இது சௌந்தர்யாவை பொறுத்தவரை கருணை. அதாவது சௌந்தர்யாவுக்கு பாம்பு தான் கடவுள். அதனால் பாம்பை தாக்குவதை சௌந்தர்யாவால் தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் தான் ரஜினிக்கு நன்றி சொல்வார் சௌந்தர்யா.
ஆனால் ரம்யா கிருஷ்ணனுக்கு பாம்பு தன்னை போல் விஷம் உடையது என நினைக்கும் ஒரு கேரக்டர். அப்படிப்பட்ட ஒரு கொடிய விஷம் உடைய பாம்புக்கு ஒருத்தர் முத்தம் கொடுத்ததால் அந்த விஷம் காதலாக உருகுகிறது. இதனால் அந்த காதலை விட்டுக் கொடுக்க ரம்யா கிருஷ்ணனால் தயாராக முடியவில்லை. இதனால் நிறைந்த சபையில் ரம்யா கிருஷ்ணன் ரஜினிக்கு முத்தம் கொடுப்பார் .
இந்த முத்தத்தால் சௌந்தர்யா தனது காதலை இழக்க நேரிடும் என கவலைப்படுவார். மணிவண்ணன் தனது மகனுக்கு ரம்யா கிருஷ்ணனை திருமணம் செய்ய நினைத்தது. இதன் மூலம் நிறாசையானது. இதனால் நடிகர் திலகத்தின் மானம் பலபேர் மத்தியில் பறிபோகிறது .கதையின் இரண்டாம் பாதியில் மகளின் மேற்படிப்புக்காக சௌந்தர்யா சம்மதிக்காமல் போக அதை சம்மதிக்க ஒரு முத்தத்தால் சௌந்தர்யாவை சம்மதிக்க வைப்பார் ரஜினி.

இதில் தனது மகளுக்கு எப்படி உதவுவது என்பதை நினைத்திருக்கும் போது, மகளே கன்னத்தை தடவி முத்தம் கொடுப்பார். இதில் ரஜினிக்கு ஐடியா கிடைப்பது போல எழுந்து சௌந்தர்யாவுக்கு முத்தம் கொடுப்பார். சௌந்தர்யா அதிர்ச்சியில் இருக்கும் பொழுது மேற்படிப்புக்கு சம்மதம் தெரிவிப்பார். அதேபோல் கதையின் கடைசி பகுதியில் ரஜினி தனது மகளிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கும்போது மகளின் திருமணத்திற்கு ஓகே சொன்னதால் மகிழ்ச்சியில் போனில் முத்தம் கொடுப்பார். அவரை பொறுத்தவரை அது அன்பு முத்தம். பாசத்தின் வெளிப்பாடு. ஆனால் அந்த முத்தத்தை பெரும் ரம்யா கிருஷ்ணனுக்கு வெறுப்பின் உச்சமாக இருக்கும். ஏற்கனவே பழிவாங்க துடிக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு தனியாக இது பூஸ்ட் போல அமைந்தது. இப்படி கதையின் முக்கியமான சில காட்சிகளுக்கு முத்தம் ஒன்றே தீர்வாக அமைந்திருக்கும்.