சாதுவாக மாறிய ரஜினிகாந்த்… ராகவேந்திரராகவே தன்னை காட்டியதற்கு பின் இந்த ரகசியமும் இருக்காம்…

Published on: October 24, 2023
rajinikanth
---Advertisement---

Actor Rajinikanth: ரஜினிகாந்த தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர். இவர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் பல வெற்றி திரைப்படங்களின் மூலம் மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் ஜெயிலர். இப்படம் மிகப்பெரிய வெற்றியையும் சந்தித்தது. இதன் பின் இவர் தனது அடுத்த திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தினை இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து ஃபகத் ஃபாஸில், அமிதாப் பச்சான், ரித்திகா சிங் போன்ற் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

இதையும் வாசிங்க:அவர்தாங்க தொழில் சொல்லிக்கொடுத்த குருவே.. சிவகார்த்திகேயனை தொடர்ந்து தனுஷும் வசமா சிக்கிட்டாரே!..

இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படபிடிப்புகள் வருகின்ற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக ரஜினியின் என்றாலே அவரின் ஸ்டைல் மற்றும் சுறுசுறுப்பான நடிப்புதான் நினைவுக்கு வரும்.

ஆனால் அப்படிபட்ட ரஜினிகாந்த் சாதுவாக மாறி நடித்த திரைப்படம்தான் இவரின் 100வது திரைப்படமான ராகவேந்திரா. இப்படத்தில் ரஜினி உண்மையான ராகவேந்திராவாகவே தன்னை நினைத்து முழு அற்பணிப்புடன் நடித்திருந்தார். இப்படம் நடிக்கும்போது ரஜினி இப்படம் வெற்றி பெறுமா என்பது பற்றியும் இப்படத்தை மக்கள் ஏற்று கொள்வார்களா, இப்படம் நல்ல வசூலை பெறுமா என எந்தவித எண்ணமும் இல்லாமல் நடித்தாராம். மேலும் இவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. ஆனால் இப்படத்தில் நடிக்கும் போது இவர் அந்த மாதிரியான எந்தவொரு கெட்டபழக்கத்தையும் தொடாமல் இருந்ததாலேயே இப்படத்தில் அவ்வாறு சாதுவாக நடிக்க முடிந்தது என கூறியிருந்தார்.

இதையும் வாசிங்க:ஆல்ரெடி ஆறு மாசமாச்சி!. அஜித் பண்ற வேலையில இன்னும் இழுக்கும்போல!. விடாமுயற்சி பரிதாபங்கள்!..

மேலும் இப்படத்தில் இவர் தான் சினிமாவில் வளர்வதற்கு யாரெல்லாம் காரணமோ அவர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்தும் விதத்தில் இப்படத்தில் அவர்கள் அனைவரையும் பணியாற்ற வைத்திருந்தார். இவர் சினிமாவில் வளர்வதற்கு பாலசந்தரின் பங்கு மிகப்பெரியது. அதனால் அவரை இப்படத்தினை தயாரிக்குமாறு கேட்டுள்ளார்.

மேலும் எஸ்.பி.முத்துராமனிடன் தனது படத்தினை இயக்குமாறு கேட்டு கொண்டுள்ளார். மேலும் தான் சினிமாவில் வலம் வருவதற்கு யாரெல்லாம் காரணமோ அவர்கள் அனைவரையும் இவர் இப்படத்தில் கெளரவித்துள்ளார். இப்படத்தின் மூலம் ரஜினியை மக்கள் உண்மையான ராகவேந்திரராகவே வணங்கினர்.

இதையும் வாசிங்க:என்ன வேணாலும் பேசிட்டு போங்க… யாருக்கும் தெரியாம சிவகார்த்திகேயன் என்ன செய்றாரு தெரியுமா?…

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.