rajini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் இந்திய அளவில் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். 50 வருடங்களை தாண்டி சினிமாவில் நடித்து வருகிறார். எம்ஜிஆருக்கு பின் அதிக ரசிகர்களை கொண்டிருந்தவர். இப்போதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போது கூட விஜய்க்கு போட்டி நடிகர் போல டஃப் கொடுக்கிறார் ரஜினி. அபூர்வ ராகங்கள் தொடங்கி ஜெயிலர் 2 வரை 172 படங்களில் நடித்து முடித்து விட்டார் ரஜினி..

அடுத்து சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப்போகிறார். அந்த படத்திற்கு பின் கமலுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
கடந்த பல வருடங்களாகவே இதுதான் ரஜினியின் கடைசி திரைப்படம் என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் ரஜினி தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் . இந்நிலையில்தான் ரஜினி தனது கடைசி படத்தை முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.

சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த படத்தில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் ஒரு தயாரிப்பாளராக இருக்கிறார்.. அதாவது ரஜினிக்கு சம்பளம் மற்றும் படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்கு என பேசியிருக்கிறார்கள். அந்த தொகை ஐஸ்வர்யாவுக்கு போகும் என்கிறார்கள். இதன் மூலம் ஐஸ்வர்யாவுக்கு ரஜினி செட்டில்மெண்ட் செய்கிறார் என்கிறார்கள்.

அதேபோல், ரஜினி நடித்துள்ள கடைசி படத்தை அவரின் இளைய மகள் சௌந்தர்யா தயாரிக்கப் போகிறார் என்கிறார்கள்.. இப்படி சொத்தைப் பிரித்துக் கொடுப்பது போல தனது இரண்டு படங்களின் மூலம் வரும் லாபத்தையும் இரண்டு மகள்களுக்கும் பிரித்துக் கொடுக்க ரஜினி முடிவெடுத்திருக்கிறாராம்..

சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.