Connect with us
lal salaam

Cinema News

செமயா நடிச்சும் யாரும் கை தட்டலயே!.. லால் சலாம் ஷூட்டிங்கில் ஏமாந்து போன ரஜினி…

சினிமா உலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். பல வருடங்கள் ஆகியும் இவரிடமிருந்து சூப்பர்ஸ்டார் பட்டம் இவரை விட்டு போகவில்லை. சில படங்களில் சறுக்கிய நிலையிலும் ஜெயிலர் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்து தானும் களத்தில் இருப்பதை நிரூபித்தார்.

ஏனெனில் ரஜினியின் சக போட்டியாளராக பார்க்கப்பட்ட கமல் லோகேஷுடன் கை கோர்த்து விக்ரம் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தார். அப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதன்பின்னர்தான் ஜெயிலர் வெற்றியை கொடுத்திருக்கிறார் ரஜினி.

இதையும் படிங்க: பட்ஜெட் அதிகமாகி தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட படங்கள்!.. அட இவ்வளவு இருக்கா?..

இதையடுத்து மீண்டும் ரஜினி – கமல் போட்டி என்பது சினிமா உலகில் துவங்கியுள்ளது. கமல் ஒருபக்கம் இந்தியன் 2, ஹெச்.வினோத், மணிரத்னத்துடன் தக் லைப், தெலுங்கில் கல்கி என அடிச்சி தூக்க ரஜினி ஜெய்பீம் பட இயக்குனருடன் வேட்டையன், மகளின் இயக்கத்தில் லால் சலாம், அடுத்து லோகேஷ் கனகராஜுடன் ஒரு படம் என புக் செய்தார்.

இதில் லால் சலாம் படம் மட்டுமே வெளியாகியிருக்கிறது. வேட்டையன் படம் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இது ரஜினிக்கே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: இந்த வாய்ப்பை நான் கெடுத்துக்க விரும்பலை… ரோலக்ஸ் படத்தில் புதிய முடிவெடுத்த லோகேஷ்…

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ‘லால்சலாம் படத்தில் ஒரு காட்சியில் அப்பா அழுவது போல ஒரு காட்சியை எடுக்க திட்டமிட்டோம். அமைதியாக இருக்கையில் அமர்ந்து அவர் அழ வேண்டும். இதுதான் காட்சி. ஆனால் அவரோ ‘நான் ஒன்று செய்கிறேன்’ என சொல்லிவிட்டு ‘மேலே பார்த்து அல்லா என கத்தி அழுதார்’.

அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டோம். காட்சி முடிந்தபின் மொத்த படப்பிடிப்பு தளமும் அமைதியாகிப்போனது. அதன்பின் ‘இப்படி நடித்திருக்கிறேன். யாரும் என்னை பாராட்டி கையை கூட தட்டவில்லையே. நன்றாக இல்லையா?’ என ஒரு குழந்தை போல கேட்டார்’ என ஐஸ்வர்யா கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top