More
Categories: Cinema News latest news

போயஸ் கார்டன்ல பொண்ணு கேட்குதோ!.. தனுஷ் குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமை.. பிரபலம் சொன்ன சீக்ரெட்!..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தனுஷ் திருமணம் செய்தபோது பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. நாக்குப்பூச்சி மாதிரி இருக்கும் நடிகர் ரஜினிக்கு மாப்பிள்ளயா என பலரும் கேள்வி எழுப்பினர்.

தனுஷ் சுள்ளான் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது சிம்புவை வெறுப்பேற்றும் விதமாக ரஜினிகாந்த் வீட்டில் பெண் எடுத்தார் என்றும் கிசுகிசுக்கள் பரவின. தனது மகள் காதலித்து விட்டாள் என்பதற்காக மட்டுமே ரஜினிகாந்த் தனுஷுக்கு ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொடுத்தார் என்றும் அந்த திருமணத்தில் அவருக்கு விருப்பமே இல்லை என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.

Advertising
Advertising

இதையும் படிங்க: சுந்தர்.சி, பார்த்திபன் தொடர்ந்து வடிவேலுவை படத்தில் பயன்படுத்தாத காரணம்! ஓ இப்படி ஒரு பிரச்சினையா?

18 ஆண்டுகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் தனுஷ் இணைந்து வாழ்ந்த நிலையில், திடீரென இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். ஆனால், சட்டப்பூர்வமாக பிரிய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர்.

இருவரும் எப்படியாவது சேர்ந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தற்போது தங்களின் திருமணம் செல்லாது என அறிவிக்கும்படி நீதிமன்றத்திடம் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: அவங்க சொன்னா ஓகே!.. எனது வெற்றிக்கு காரணமே அவர்கள்தான்!.. நாகேஷ் சொன்ன சீக்ரெட்!..

கஸ்தூரி ராஜா ரொம்பவே சாதாரணமானவர். நடிகர் தனுஷ் கஷ்டப்பட்டு இந்த குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்தார். தனுஷ் திருமணத்தின் போது பலரும் இழிவாக பேசினர். சௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட விசாகன் குடும்பம் வசதியான குடும்பம். ஆனால், போயஸ் கார்டனில் பெண்ணெடுத்த தனுஷ் குடும்பம் அந்த அளவுக்கு வசதி இல்லைன்னு ஏளணம் செய்துள்ளனர்.

அதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு கட்டி தன் தந்தை மற்றும் தாயாரை அங்கே குடியிருத்தியுள்ளார் என செய்யாறு பாலு புதிய வீடியோவில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: திடீரென கன்னத்தில் ரஜினி செய்த ’அந்த’ விஷயம்… ரம்பாவை தொடர்ந்து அடுத்து ஷாக் சொன்ன நடிகை…

Published by
Saranya M

Recent Posts