Connect with us

Cinema History

சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் 40 பேருடன் சண்டைக்கு நின்ற ரஜினிகாந்த்… வாட் ஏ மேன்!…

Rajinikanth: பொதுவாக நடிகர்கள் சினிமாவில் ஒரு மாதிரியும் நிஜவாழ்க்கையில் ஒருமாதிரியும் இருப்பார்கள். ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ரியாலிட்டியில் தான் எப்போதுமே இருப்பார். சினிமாவில் மட்டுமல்லாமல் ரியல் லைவில் கூட 40 பேருடன் சண்டை செய்த சூப்பர் சம்பவம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழில் வெளிவந்த ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தின் கன்னட மதிப்பான பாலு ஜோனு என்ற படத்திலும் ரஜினிகாந்த் வில்லனாக நடித்தார். படத்தின் ஷூட்டிங்கில் அங்குள்ள மயூரா ஹோட்டலில் தங்கி இருந்தபோது ஒரு ஆச்சரியமான சம்பவமும் நடந்திருக்கிறது.  ஒரு நாள் அவசரமாக ஷூட்டிங்கிற்கு கிளம்பிக் கொண்டிருந்த ரஜினிகாந்த் அறையை பூட்டாமல் சென்று விட்டார்.

இதையும் படிங்க: பாக்யராஜால் பள்ளியை விட்டே வெளியேறிய பானுப்பிரியா… அதன்பின் என்ன நடந்ததுன்னு தெரியுமா?

உடனே அங்கிருந்த ஊழியர்கள் எல்லாரும் சேர்ந்து கொண்டனர். கிட்டத்தட்ட 40 பேர் அவரை சுற்றி வளைக்க கையில் ஆயுதங்களுடன் நின்றனராம்.  ஆனால் கொஞ்சமும் பயப்படாத ரஜினிகாந்த் அவர்களை தன்னால் முடிந்த அளவு தாக்கி தற்காத்துக் கொண்டார். இந்நிலையில் படத்தின் இயக்குனரான கே.ஆர்.பாலனும் அருகில் இருந்ததால் அவர் தன் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாராம்.

இதையும் படிங்க: உற்சாகத்தில் இளையராஜா போட்ட மெட்டு…. இன்று வரை அதை முறியடிக்க பாடலே இல்லை…!

விஷயத்தை நேரில் பார்த்தவருக்கு ரொம்பவே அதிர்ச்சியாகி விட்டதாம். ரஜினி முடிந்தவரை சண்டை செய்தாலும் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் அவர் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்பதால் அவரை காருக்குள் இழுத்துப்போட்டு கேட்டை உடைத்து அழைத்து சென்றுவிட்டாராம். ரஜினியை பாதுகாப்பாக அவர் நண்பர்கள் வீட்டில் தங்க வைத்து இருக்கிறார். ஹூட்டிங் நடந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பு இருந்ததால் பிரச்னை இல்லையாம்.

இருந்தும் இந்த பிரச்னை இப்படியே இருந்தால் ரஜினிக்கு ஆபத்து எனக் கருதுகிறார் பாலன். பின்னர் சண்டை கலைஞர்களை அழைத்துக்கொண்டு சில நாட்கள் கழித்து மயூரா ஹோட்டலுக்கு போய் சமாதானம் செய்தே இந்த பிரச்னையை முடித்தார்களாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top