Connect with us

Cinema News

கடைசி வரைக்கும் அந்த தாஜ்மகாலை காட்டலையேப்பா!.. அந்த வசனத்துக்கே எண்ட் கார்டு வச்ச சூப்பர் ஸ்டார்!

சியான் விக்ரம் நடித்த தூள் படத்தில் மெரினா பீச்சை சுற்றி பார்த்து விட்டு திரும்பும் பரவை முனியம்மா கடைசி வரை அந்த தாஜ்மகாலை கண்ணுலையே காட்டலையேப்பா என சொல்வார். அந்த வசனத்தை இனிமேல் சென்னைக்கு வரும் யாரும் சொல்ல முடியாத அளவுக்கு ரஜினிகாந்த் ஒரு சூப்பரான வேலையை பார்த்து விட்டாரே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கலைஞரின் நினைவு மண்டபம் சென்னை மெரினா கடற்கரை அருகே கட்டப்பட்டு வந்த நிலையில், இன்று திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: யோகா, தியானம்லாம் பண்ணியும் கோபம் குறையலையேப்பா! சிவகுமாரை பங்கமா கலாய்த்த பிரபலம்!..

ரஜினிகாந்த் நிகழ்ச்சிக்கு செல்லும் போது, அவர் காரை விட்டு இறங்கியதுமே ஓடோடி வந்து உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். அதே போல ரஜினிகாந்த் எங்கேப்பா காணோம் என ஸ்டாலின் அவரை தேடி அலைந்த காட்சிகளும் அவருடன் ரஜினிகாந்த் அருகே அமர்ந்து உரையாடிய காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

கலைஞர் நினைவு மண்டப திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது இது கலைஞர் நினைவு மண்டபம் என சொல்வதை விட கலைஞரோட தாஜ்மகால்னு சொல்லலாம் என பூரித்துப் போய் ரஜினிகாந்த் பேசியதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர்.

இதையும் படிங்க: அய்யய்யோ ஆளவிடுங்க!.. எனக்கும் அந்த தயாரிப்பாளருக்கும் சம்மந்தமே இல்லை!.. அலறியடித்த அமீர்!

சமீபத்தில் சசிகலாவின் இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த் வீட்டை கோயில் மாதிரி கட்டியிருக்கீங்கன்னு ரஜினிகாந்த் பாராட்டினார். அரசியலில் இருந்து ரஜினிகாந்த் விலகினாலும் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்தை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து வருகின்றனர். ரஜினிகாந்தும் தென்னை மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்துன்னு அனைவருக்கும் நான் பொதுவானவன் என மாறி உள்ளார் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

google news
Continue Reading

More in Cinema News

To Top