More
Categories: Cinema History Cinema News latest news

ஷூட்டிங்கில் ஹாயாக இருந்த ரஜினி… ஒரே அழைப்பால் அலற விட்ட பிரபலம்..! சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?

Rajinikanth: ரஜினிகாந்த் எப்போதுமே அமைதியாக இருப்பவர். யாரிடமும் ரொம்ப பந்தா காட்டும் பழக்கம் அவருக்கு இருந்தது இல்லை என்று தான் கோலிவுட் வட்டாரத்தில் இன்றளவிலும் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட ரஜினியையே ஒரு பிரபலம் அலற விட்டார் என்பது சுவாரஸ்யமான விஷயம் தானே.

நடிகர் இளவரசு, சித்ரா லட்சுமணன் பேட்டியில் பேசும்போது, ஒரு கட்டத்தில் ரஜினியும், கமலும் கட்சி தொடங்க போகிறார்கள் என்று முடிவாகி விட்டது. எதிரும் புதிருமாக மோதிக்கொள்ள போகிறார்கள் என நாங்கள் நினைத்து கொண்டு இருந்தோம். 

Advertising
Advertising

இதையும் படிங்க: தலைவர் 170-க்கு ரிலீஸ் தேதியை குறித்த ரஜினி!.. சிக்குறவன்லாம் சின்னா பின்னம் ஆகணுமாம்!..

அந்த சமயம் கோச்சடையான் படம் பார்க்கும் விஷயம் குறித்து ரஜினியிடம் கமல் சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் லிங்கா படத்தின் ஷூட்டிங்கிற்காக பெங்களூரில் ரஜினி இருந்தார்.  ஷூட்டிங்கிற்கான காட்சிகள் அவருக்கு சொல்லப்பட்டு கொண்டு இருந்தது.

பாட்ஷா ஸ்டைலில் கால் மேல் கால் போட்டப்படி அமர்ந்து இருந்தார். சுப்பையா என்பவர் ரஜினியிடம் வந்து சார் என அழைத்தார். என்ன என ரஜினி கேட்டதும் கமல் சார் லைனில் இருக்கிறார் என சொன்னதும். உடனே காலை டக்கென இறக்கிவிட்டாராம். உடனே போனை வாங்கி கமலிடம் பேசி முடித்தார்.

இதையும் படிங்க: சிவாஜியின் சூப்பர்ஹிட் படமான தில்லானா மோகனாம்பாள்… ஆனா உண்மையில் யார் நாதஸ்வரம் வாசித்தது தெரியுமா?

அதற்கு பின்னர் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். லைவாக இதை பார்த்த போது பிரமித்து விட்டேன். ரஜினி கால் எப்படி போட்டு உட்கார்ந்து இருப்பார் என கமல் தெரிந்து வைத்திருப்பாரா என்ன? இதை நடிப்பால் எல்லாம் கொண்டு வந்து விட முடியாது. அவர்களுக்குள் ஒரு நல்ல நட்பு இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

Published by
Akhilan

Recent Posts