ஒரு வாரத்தில் ரிலீஸ்… திடீரென ஒரு பாட்டு கேட்ட இயக்குனர்… ஆனா அதுதான் படத்தோட சூப்பர்ஹிட்டாம்!…

ரஜினியின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான ராஜசேகர் இயக்கிய படிக்காதவன் படம் அவரின் திரைப்பயணத்தில் முக்கியமான படம். இந்தப் படம் வசூலில் மிகப்பெரிய ஹிட்டடித்தது என்பதைத் தாண்டி ரஜினியும் சிவாஜியும் நடித்திருந்தது மற்றொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

1980களில் ஹிந்தியில் அமிதாப் செய்த பல படங்களை தமிழுக்குக் கொண்டுவந்து மிகப்பெரிய வெற்றியையும் பெற்றார் ரஜினி. அதில் `Khud-Daar’ என்கிற பெயரில் 1982-ம் ஆண்டு வெளியான படத்தைத் தமிழில் உருவாக்க நினைத்தார். இதையடுத்து நண்பர் ராஜசேகரோடு இணைந்து தமிழுக்கு ஏற்றபடி திரைக்கதையில் சில, பல மாற்றங்களைச் செய்தார்.

இளையராஜா இசையமைக்க, ரஜினியின் அண்ணனாக சிவாஜி நடிக்க முடிவு செய்யப்பட்டது. அம்பிகா நாயகியாகவும் முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இளையராஜா இசையில் நான்கு பாடல்களின் ஷூட்டும் முடிந்து எடிட்டிங் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது, குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில், ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்குமே என இயக்குநர் ராஜசேகருக்குத் தோன்றியிருக்கிறது. ஒரு வாரத்தில் ரிலீஸ் என்ற நிலையில், குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு பாட்டு வேண்டும் என இயக்குநர் ராஜசேகர் சொல்லியிருக்கிறார்.

ஆரம்பத்தில் படக்குழுவினர் இது எப்படி சாத்தியம் என்று தயங்கியிருக்கிறார்கள். ஆனால், கண்டிப்பாக பாட்டு வேண்டும் என்பதில் ராஜசேகர் உறுதியாக இருந்தாராம். இதையடுத்து, அடுத்தநாள் காலையிலேயே இளையராஜா ட்யூன் போட்டு, மதியத்துக்குள் ரெக்கார்டிங்கை முடித்துக் கொடுக்கிறார்.

அந்த ஒருநாள் இரவிலேயே ரஜினி – அம்பிகாவை வைத்து ஷூட் செய்யப்பட்டு கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட பாடல்தான் `ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்..’ பாடல். அந்தப் படத்தில் மிகப்பெரிய ஹிட் பாடலாக அது அமைந்தது.

Akhilan

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

6 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

7 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

9 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

21 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

22 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago