Connect with us

நல்லக்கண்னு இரங்கல் கூட்டத்தில் ஜாலியாக பேசிய பிரேமலதா – ரஜினி!…

rajinikanth

latest news

நல்லக்கண்னு இரங்கல் கூட்டத்தில் ஜாலியாக பேசிய பிரேமலதா – ரஜினி!…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நேற்று மரணமடைந்தார். தமிழக அரசியலில் மிகவும் தூய்மையான, நேர்மையான, உண்மையான தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் நல்லக்கண்ணு. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பொதுவாழ்க்கைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் இவர்.

சுதந்திர போராட்டம் துவங்கி பல போராட்டங்களை இவர் நடத்தியிருக்கிறார். பல வருடங்கள் சிறையில் கழித்திருக்கிறார். அவருக்கு வயது 101. கடந்த சில நாட்களாகவே உடல்நிலை மோசமாகி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு இந்தியா உடலுக்கு உள்ள கம்யூனிஸ்ட் தோழர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தனது உடலை மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானம் செய்திருக்கிறார் நல்லக்கண்னு. எனவே, இறுதி சடங்குக்கு பின் அவரின் உடல் சென்னை மருத்துவக்கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில்தான், அவருக்கு இரங்கல் தெரிவிக்க வந்த நடிகர் ரஜினிகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் சகோதரர் சுதீஷ் ஆகியோருடன் கமலுடன் தான் நடிக்கும் படம் தொடர்பாக பேசியது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

நீங்களும், கமலும் நடிக்கும் படம் வீடியோ பார்த்தேன்.. ‘நல்லா இருந்தது’ என பிரேமலதா சொல்ல, அருலில் இருந்த சுதீஷ் ‘அந்த கண்ணாடியை நீங்க கழட்டின உடனே’ என சொன்னார். அதைக்கேட்ட ரஜினி ‘நெல்சன் நல்ல டைரக்டர்’ எனக்கூறினார். நல்லக்கண்ணு ஐயாவுக்கு அஞ்சலி செலுத்தவந்துவிட்ட அந்த இடத்தில் இதை பேசவேண்டுமா என ரஜினியை பிடிக்காதவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

To Top