Connect with us

Cinema News

விடாமுயற்சியால் சிக்கலில் சிக்கிய ரஜினிகாந்த்… இது என்னங்க சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை!…

Rajinikanth: தமிழ் சினிமாவுக்கு இந்த வருடமே சோதனை காலமாகிவிட்டது போல. ஆரம்பத்தில் இருந்து வருவது எல்லாமே நெகட்டிவ் செய்திகளாகவே வரும் நிலையில் இப்போ ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துக்குமே ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது ரஜினிகாந்த் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. கிட்டத்தட்ட தற்போதைய நிலையில் கோலிவுட்டின் டாப் நிறுவனங்களில் ஒன்று தான் லைகா. அதன் மதிப்பு எப்படி என்றால்? கத்தி படத்தில் பிரச்னை நடந்த போது. உலகம் முழுவதில் இருக்கும் இருக்கும் எங்க ஊழியர்களின் ஒரு வேளை டீ செலவு தான்.

இதையும் படிங்க: ஒரே மெட்டில் ரெண்டு கதைகளை சொன்ன கண்ணதாசன்.. எந்தப் படத்தில் தெரியுமா?..

தூக்கிப் போட்டுவிட்டு போவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றனர். அப்படிப்பட்ட லைகா இன்று ஒரு செட்டுக்கு காசே கொடுக்க முடியாத நிலைக்கு வந்து இருக்கின்றனர். சமீபத்தில் ஹைதராபாத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ப்ளான் செய்யப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட ரஜினிகாந்தும் கிளம்பி சென்றுவிட்டார்.

ஆனால் அங்கு ஷெட் போட டீமுக்கு பேமெண்ட் வராததால் அங்கு ஷூட்டிங் நடத்த முடியவில்லையாம். இதனால் ரஜினிகாந்தை கிளம்பிவிட தயாரிப்பு தரப்பு கோரிக்கை விடுத்து இருக்கிறது. அவரும் சென்னை திரும்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கு காரணம் அஜித் எனவும் கிசுகிசுக்கின்றனர். விடாமுயற்சியை எந்த ரசிகர்களும் வரக்கூடாத இடத்தில் ப்ளான் செய்தவர் அஜித் தான்.

இதையும் படிங்க: கார் அனுப்புறதுல கூட இப்படி ஒரு கொள்கையா?!.. கண்ணதாசனுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..

அது ஒரு புறமிருக்க விடாமுயற்சி படக்குழுவும் ஏகத்துக்கு செலவை அதிகரித்து வைத்திருக்கிறார்கள். இதனால் வேட்டையன் கடைசிக்கட்ட படப்பிடிப்பே அடிப்பட்டு இருக்கும் நிலை உருவாகிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் உருவாகி இருக்கிறது. இதனை சீக்கிரம் சரி செய்து வேட்டையன் முடித்தால் மட்டுமே அடுத்தக்கட்ட படங்களை தொடங்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top