More
Categories: Cinema History Cinema News latest news

சிகரெட்டைப் பிடுங்கி எறிந்த சரத்பாபு… அவரையே பற்ற வைக்க வைத்த ரஜினி..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும், சரத்பாபுவுக்கும் இருக்கும் நட்பு ரொம்ப ஆழமானது. அதை அண்ணாமலை படத்தில் வெகு அழகாகக் காட்டியிருப்பார்கள். உண்மையிலேயே சரத்பாபு ரஜினியின் உடல் நலன் மீது மிகுந்த அக்கறை கொள்வாராம். இதை ஒருமுறை ரஜினியே இவ்வாறு கூறியுள்ளார்.

Rajni 1

சரத்பாபு நான் சிகரெட் பிடிப்பதைப் பார்த்தால் மிகவும் வருத்தப்படுவார். சிகரெட்டை நிறுத்து. உடம்பை கெடுத்துக்காத. ரொம்ப நாள் நீ வாழணும். அப்படின்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு.

Advertising
Advertising

குறிப்பாக நான் சிகரெட் பிடிச்சிட்டு இருப்பதைப் பார்த்தால் அதைப் பிடுங்கி தூக்கி கீழ போட்டு அணைச்சிருவாரு. இதனால அவரு முன்னாடி நான் சிகரெட்டே பிடிக்க மாட்டேன்.

இப்படி சொல்லிருக்காரு. இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா சூப்பர்ஸ்டாரே அவரு முன்னாடி சிகரெட் பிடிக்க மாட்டாராம். அவ்ளோ மரியாதை வச்சிருந்துருக்காரு.

ஆனா அப்படிப்பட்ட சரத்பாபுவே ரஜினிக்கு சிகரெட் பற்ற வைத்தும் விட்டாராம். அதையும் ரஜினியே இப்படி சொல்லிருக்காரு. இருவரும் இணைந்து நடித்த படம் அண்ணாமலை. படத்தில் சரத்பாபு வீட்டுக்கு வந்து ரஜினி கோபமாக பேசும் நீண்ட வசனம் ஒன்று வரும்.

அந்தக் காட்சியில் சரியாக வசனத்தைப் பேசி முடிக்க ரஜினி திணறிக் கொண்டிருந்தாராம். அடுத்தடுத்த 10….. 12 டேக் என போய்க் கொண்டு இருக்க, சரத்பாபு ரஜினி அருகில் வந்து கூச்சோ இக்கடா அப்படின்னு சொல்லி ஏ சிகரெட் தீசுகோரண்டி அப்டின்னு சொல்லி சிகரெட் தாகுன்னு சொன்னவர் அதைப் பற்ற வைத்து ரஜினியை ரிலாக்ஸ் செய்ய சொல்லி இருக்கிறார்.

அந்த சிகரெட் பிடிச்சதுக்கு அப்புறம் தான் அந்த டேக் ஓகே ஆனதாம். இதனை ரஜினி சரத்பாபுவின் இறுதி அஞ்சலியின் போது தெரிவித்தார்.

Published by
sankaran v

Recent Posts