rajnikanth
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக நடித்துத் தாரேன்னு உறுதியாக சொன்னார் ரஜினி. அப்படி வாக்குறுதி கொடுத்தாலும் அதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.
அதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர் இருந்ததுதான். படம் பண்ணச் சொல்லி பல பேரு கேட்குறாங்க. அதனால எல்லாருக்கும் சேர்த்து ஒரு படம் பண்ணிடலாம்னு இருக்கேன். அதுல ஒரு பங்குதாரராக இருக்க உங்களுக்கு சம்மதமா என விகே.ராமசாமியைப் பார்த்து ஒருநாள் கேட்டார் ரஜினி. பெருந்தன்மையோடு ஒரு வாய்ப்பு தர்றீங்க.
அதை எப்படி மறுக்க முடியும் என்று பதில் அளித்தவர் தான் விகே.ராமசாமி. அந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் விகே.ராமசாமி எந்த முதலீடும் செய்யவில்லை. ஆனாலும் அந்தப் படத்தின் லாபத்தை பல பேருக்குப் பிரித்துக் கொடுத்தார் ரஜினி. அதில் ஒரு பகுதியை விகே.ராமசாமிக்கும் கொடுத்தார். பதினோரு திரைப்படங்களைத் தயாரித்தேன்.
பல நூறு படங்களிலும் நடித்தேன். லட்ச லட்சமா சம்பாதித்தேன். ஆனாலும் அவை எதுவும் எங்கிட்ட தங்கல. எங்கிட்ட பராமரிக்கின்ற திறமை இல்லாததால யார் யாரோ அள்ளிக் கொண்டு போனாங்க. பைசா மிச்சமில்லாமல் துடைத்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். தனி மரமாக என்னை விட்டு விட்டுப் போனார்கள். நான் எந்தக் காலத்துல யாருக்கு என்ன தர்மம் செய்தேன் அப்படின்னு எனக்குத் தெரியாது.
எனக்கு ரஜினிகாந்த் மூலம் மிகப்பெரிய தொகை கிடைத்ததுன்னா அதுக்கு முக்கியமான காரணம் அந்த தர்மம்தான். என் வாழ்க்கையின் கடைசி காலத்தை நான் நிம்மதியாகக் கழித்தேன் என்றால் அதற்கு முக்கியமான காரணம் ரஜினிகாந்த் செய்த அந்த உதவி தான் என்று பல பத்திரிகை பேட்டிகளில் பதிவு செய்துள்ளார் விகே.ராமசாமி.
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…