Cinema History

சூப்பர் படத்தை மிஸ் பண்ண பார்த்த சூப்பர்ஸ்டார்…! இயக்குனரிடம் அப்படியா கேட்டாரு?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஸ்டைல் மட்டும் தான் தெரியும் நடிப்பு எல்லாம் வராது என்று சொல்பவர்களுக்கு இந்தப் படத்தைப் பார்த்தால் தெரியும் ரஜினியால் இப்படி கூட நடிக்க முடியுமா என்று? அவ்வளவு அற்புதமான படம்.

அதுதான் ஆறிலிருந்து அறுபது வரை. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேரக்டராகவே வாழ்ந்து இருப்பார். வழக்கமான ஸ்டைல், பஞ்ச் டயலாக் எல்லாம் கிடையாது.

1979ல் பஞ்சு அருணாசலம் கதை எழுத எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியானது இந்தப் படம். ரஜினிக்கு ஜோடியாக படாபட் ஜெயலட்சுமி நடித்துள்ளார். சோ, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் கண்மணியே காதல் என்பது, வாழ்க்கையே வேஷம், ஆண்பிள்ளை என்றாலும் என முத்து முத்தான பாடல்கள் உள்ளன.

இந்தப் படத்தின் போது ரஜினிகாந்த் திடீரென பாதிப் படத்தின்போது நடிக்காமல் தயங்கிக் கொண்டே இருந்துள்ளார். இதுக்கு என்ன காரணம்னு படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சில ஆச்சரிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

ஆறிலிருந்து அறுபது வரை படத்துல தான் எனக்கும் ரஜினிக்கும் ஒரு பிரச்சனை வந்தது. அது வெறும் படம் அல்ல. எங்க வாழ்க்கையில நடந்த சம்பவங்களின் தொகுப்பு. பாதி படம் நடிச்சிக்கிட்டு என்ன சார் தம்பி, தங்கைக்கு இவ்ளோ உதவி செய்றேன். இப்படி நன்றி கெட்டத்தனமா பண்ணுவாங்களா? இதுல ஏதோ லாஜிக் இடிக்குதுன்னு சொன்னார்.

அப்புறம் நானும் பஞ்சு அருணாச்சலமும் ஒரு 5000 அடி எடுத்து காமிக்கிறோம். அதைப் பாரு. உனக்குப் புடிக்கலைன்னா கதையை மாத்திடலாம்னு சொன்னோம். சொன்ன மாதிரி எடுத்து காமிச்சதுக்கு அப்புறம் எங்களை அப்படியே கட்டிப் புடிச்சிக்கிட்டு சார் ஒரு நல்ல படத்தை மிஸ் பண்ண பார்த்தேன். நீங்க என்னை சரியா வழி நடத்திட்டீங்கன்னு சொன்னார் ரஜினி என்கிறார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

sankaran v

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

37 minutes ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

2 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

3 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

15 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

16 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

21 hours ago