ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் துரந்தர் 2. ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள இந்தப் படம் பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்திய சினிமாவின் முன்னணி மற்றும் சர்ச்சைக்குரிய இயக்குநரான ராம் கோபால் வர்மா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு முதல் விமர்சனத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அவர் கூறியிருப்பதாவது:
“நேற்றிரவு #Dhurandhar2 திரைப்படத்தைப் பார்த்தேன். இது ஷோலே படத்தைப் போல 100 மடங்கு பிரம்மாண்டமானது. இனி ‘இயக்குநர்’ என்ற வார்த்தையே ஆதித்யா தார் பெயரில்தான் தொடங்கும். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் போன்ற ஹாலிவுட் ஜாம்பவான்கள் கூட, தாங்கள் செய்து கொண்டிருக்கும் அத்தனை வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு, Dhurandhar 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பதுதான் புத்திசாலித்தனமானது என்று கூறியுள்ளார்.
ராம்கோபால் வர்மவின் இந்த விமர்சனத்தை அடுத்து படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.





