ஹவுஸ் ஃபுல்லா ஓடிக் கொண்டிருந்த ராமராஜன் படம்!..ரெண்டே நாளில் தூக்கிய ஜெயலலிதா!..

by Rohini |
jaya_main_cine
X

மக்கள் நாயகன், கிராமத்து நாயகன் என்று பலராலும் அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் ராமராஜன். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன் பின் நடிக்க வந்து சில படங்களையும் இயக்கினார். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வெள்ளி விழா நாயகனாக உயர்ந்தார்.

jaya1_cine

நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராமராஜன். சினிமாவில் இருக்கும் போதே எம்ஜிஆரின் மீதுள்ள பற்றினால் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் ஜெயலலிதாவின் அன்பையும் பெற்றார்.

இதையும் படிங்க : “எனக்கு நேஷனல் அவார்டா? என்ன கலாய்க்குறீங்களா?”… உறக்கத்தில் இருந்த சரண்யாவை கடுப்பேத்திய நபர்…

jaya2_cine

இன்னும் சொல்லப்போனால் ராமராஜனுக்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள அந்த நட்பு ராமராஜனின் வீடு வரை ஜெயலலிதாவை இழுத்துச் சென்றது. ராமராஜனின் வீட்டிற்கு சென்று அவரின் இருமகள்களுக்கும் தங்கச்சங்கிலியை அன்பளிப்பாக அளித்தாராம். அதன் பின் கரகாட்டக்காரன் படம் வெளியாகி யாரும் எதிர்பாராத அளவு மாபெரும் வெற்றி பெற்றது. ஒரு சமயம் ராமராஜன் மீதுள்ள அன்பால் ரசிகர்கள் இவரை தமிழ் நாட்டின் அடுத்த அமைச்சர், முதலமைச்சர் என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கின்றனர். இது ஜெயலலிதா காதிற்கு சென்றிருக்கிறது. இதனாலேயே கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிவிழாவிற்கு ஜெயலலிதா வரவில்லையாம்.

இதையும் படிங்க : அங்க மட்டும் மூட மாட்டேன்!..வழுவழு தொடையை காட்டி சூடேத்தும் இஷா ரெப்பா…

jaya3_cine

அதன் பின் ஊர் விட்டு ஊர் வந்து படம் வெளியாகி இரண்டு நாள்கள் தேவி பாரடைஸில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் அதிமுகவில் இருந்து ராமராஜன் நீக்கப்பட்டு அந்த படத்தையும் தியேட்டரில் இருந்து ஓரங்கட்டி விட்டனராம். இதற்கு காரணம் ஜெயலலிதா தான் என்று இந்த தகவலை பகிர்ந்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரெங்கநாதன் கூறினார். மேலும் தனக்கு இணையாக யார் வளர்ந்து வந்தாலும் அது ஜெயலலிதாவிற்கு பிடிக்காது எனவும் ரெங்கநாதன் தெரிவித்தார்.

Next Story