மதுரை மேலூரில் ஒரு தியேட்டரில் வேலை செய்து வந்தவர்தான் குமரேசன்.. அதன் பின் சென்னை வந்து இயக்குனர் ராமநாராயணனிடம் உதவியாளராக சில படங்களில் வேலை செய்தார். அதன்பின் சில மண்ணுக்கேத்த பொண்ணு, மருதாணி, ஹலோ யார் பேசுறது, மறக்க மாட்டேன் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார்.
ஒரு கட்டத்தில் தனது பெயரை ராமராஜன் என மாற்றிக்கொண்டு நடிகராக மாறினார். தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து வெற்றி கொடுத்தார். இவர் நடிப்பில் வெளியான 95 சதவீத படங்கள் கிராமத்து கதைகள்தான். இவர் நடித்து ரிலீஸான கரகாட்டக்காரன் திரைப்படம் அசத்தலான வெற்றியைப் பெற்று பெற்றது.. சில திரையரங்குகளில் இப்படம் ஒரு வருடம் கூட ஓடியது.
80களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக ராமராஜன் இருந்தார்.. இவரின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தனர். இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் கொடுத்த பேட்டியில் ராமராஜன் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். நான் சென்னை வந்தபோது எல்டாம்ஸ் சாலையில் தங்கியிருந்தேன்.. எனது அறைக்கு அருகில்தான் செந்தில், பார்த்திபன் ஆகியோர் தங்கியிருந்தனர். கவுண்டமணி அவ்வப்போது அறைக்கு வந்து விட்டுப்போவார்..
குமரேசன் என்கிற பெயர் கேட்சிங்காக இல்லை. எனவே பெயரை மாற்ற நினைத்தேன்.. எனது அப்பா பெயர் ராமையா.. நான் பிறந்தது ராமநாதபுரம்.. எல்டாம் சாலையில் நான் தங்கியிருந்த விடுதியின் சொந்தக்காரரின் பெயர் ராமசாமி.. என்னை வேலைக்கு சேர்த்துவிட்டவரின் பெயர் ராமசாமி. இப்படி ராம் என்பது எனக்கு நெருக்கமான ஒன்றாகவே இருந்தது. ஒருபக்கம் இளையராஜா, பாரதிராஜா ஆகியோர் கலக்கி கொண்டிருந்தார்கள். எனவே ராமராஜா என என யோசித்தேன். ஆனால் அது நான்கு எழுத்துதான் வருகிறது.. எனவே ராமராஜன் என வைத்துக் கொண்டேன்’ என சொல்லியிருக்கிறார்.






