Cinema News
முழு சாமியாராக மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ராஷி கண்ணா.! என்னென்ன சொல்ராங்க பாருங்க…
தெலுங்கு, தமிழில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை ராசி கண்ணா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.இதற்கிடையில் , அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில், வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
நடிப்பதை மட்டுமின்றி, ராசி கண்ணா ஆன்மிகத்திலும் ஈடுபாடு கொண்டவர். ஆன்மிகம் தொடர்பாக சமீபத்திய ஒரு நேர்காணலில் ராசி கண்ணா பேசியுள்ளார். அவர் பேசியது ” ஆன்மீகம் என்பது என் பார்வையில் என்னவென்றால், நாம் வாழும் இந்த வாழ்க் கையில் கிடைத்த அனைத்தையும் ஒரேமாதிரி ஏற்றுக்கொள்வது மட்டுமே என்று சொல்வேன். வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும், அது என் கர்மாவைப் பொறுத்தே கிடைக்கும். எனவே, மிகப்பெரிய வெற்றி கிடைத்தாலும் எனக்கு கர்வம் ஏற்படுவது இல்லை.
எப்போதும் போல் நான் எந்த சூழ்நிலைகளிலும் சாதாரணமாகவே இருப்பேன். கடுமையான தோல்வி அடைந்தாலும் சோர்வடைய மாட்டேன். இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்வதே தலைசிறந்த வாழ்க்கையின் முறையாகும்.
இதையும் படியுங்களேன்- மலையாள நடிகரை ரகசிய திருமணம் செய்த நித்யா மேனன்.?! உண்மை நிலவரம் இதோ…
அதுபோல், எந்த விஷயத்துக்கும் நான் கோபப்படுவதே இல்லை. அது எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி, அதன் சாதக பாதகங்களை அறிந்து அமைதியாக இருப்பேன். இந்த உலகில் எனக்கு கிடைத்துள்ள வாழ்க்கையை மிகவும் நேசிக்கிறேன்” என பேசியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னென்ன சொல்ராங்க பாருங்க என கலாய்த்து வருகிறார்கள்.