Connect with us
sathyaraj

Cinema History

சத்தியராஜுக்கு ரஜினியை பிடிக்காமல் போக காரணம் இதுதான்!.. இவ்வளவு நடந்திருக்கா?!..

திரையுலகில் ரஜினியை பிடிக்காத நடிகர்களில் ஒருவர் சத்தியராஜ். இது சினிமாவில் பல வருடங்களாக இருக்கும் நடிகர், நடிகர்களுக்கும், சினிமா பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும். ரஜினி மீது எப்போதும் சத்தியராஜுக்கு சில கோபங்கள் நிரந்தரமாக இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் காவிரி நீர் பிரச்சனை தொடர்பான கூட்டத்தில் பேசிய சத்தியராஜ் ரஜினியை மறைமுகமாக கடுமையாக திட்டினார். ஆனால், அதற்கு ரஜினி எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை. அதேபோல், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க சத்தியராஜை அணுகியபோது மிகவும் அதிக சம்பளத்தை கேட்டு அதிர வைத்தார் சத்தியராஜ். எனவே, அவர் அப்படத்தில் நடிக்கவில்லை.

sathyaraj

sathyaraj

ரஜினி மீது சத்தியராஜுக்கு இருக்கும் கோபம் அல்லது காழ்ப்புணர்ச்சி என்பது பல வருடங்களுக்கு முன்பே துவங்கியது. சத்தியராஜ் சின்ன சின்ன வேடங்களில் நடித்து கொண்டிருந்த போது ரஜினி படங்களிலும் நடித்து வந்தார். அப்படித்தான் ரஜினி நடித்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் சத்தியராஜ் நடித்திருந்தார். ரஜினி இப்போது போல் அப்போத இல்லை. படப்பிடிப்பில் ஜாலியாக லூட்டி அடிக்கும் நபர். 1984ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகை மாதவி, சுலக்‌ஷனா, செந்தாமரை என பலரும் நடித்திருந்தனர்.

படப்பிடிப்பில் சத்தியராஜை பார்த்த மாதவி அவர் யார் என ரஜினியிடம் கேட்க ‘அமெரிக்காவில் நியுயார்க் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் புரபஷராக பணிபுரிந்து வருகிறார். நடிப்பை சொல்லி கொடுப்பார். தமிழ் சினிமா மீது ஆர்வம் இருப்பதால் அவ்வப்போது சில படங்களில் நடிப்பார்’ எனக்கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம். மாதவிக்கு அவ்வளவாக தமிழ் தெரியாது. அதிகமாக ஆங்கிலத்தில்தான் பேசுவார்.

rajini

rajini

அடுத்த நாள் சத்தியராஜின் அருகே அமர்ந்த மாதவி ‘நீங்கள் எப்படி வகுப்பு எடுப்பீர்கள். என்ன மாதிரியான நடிப்பையெல்லாம் சொல்லிக்கொடுப்பீர்கள்’ என ஆங்கிலத்தில் கேள்விகளை கேட்க, சத்தியராஜ் திருதிருவென முழித்தாராம். தூரத்தில் இதை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த சுலக்‌ஷனா மாதவியிடம் வந்து ‘அவர் புரபஷர் எல்லாம் கிடையாது. சாதாரண நடிகர்தான். ரஜினி சார் உங்களிடம் விளையாட்டுக்கு பொய் சொன்னார்’ என சொல்ல இதுவே ரஜினி மீது சத்தியராஜுக்கு கோபம் வர முக்கிய காரணமாக இருந்துள்ளது.

sathyaraj

அதன்பின் மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரம் என்பதை உறுதி செய்து கொண்டுதான் சத்தியராஜ் அப்படத்தில் நடித்துள்ளார். அப்படம் உருவான போது படத்தின் நீளம் காரணமாக சத்தியராஜ் நடித்த சில காட்சிகளை இயக்குனர் வெட்டியுள்ளார். இதற்கு பின்னணியிலும் ரஜினிதான் இருந்திருப்பார் என அவராகவே கற்பனை செய்து கொண்டு ரஜினி மீது கோபப்பட துவங்கினார். அதன்பின் பல வருடங்களாகியும் சத்தியராஜ் ரஜினியுடன் நடிக்கவே இல்லை.

இந்த தகவலை சினிமாவில் பல வருடங்களாக பத்திரிக்கையாளராக இருக்கும் செய்யாறு பாலு ஒரு யுடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: என்ன செல்லம் பொசுக்குன்னு கழட்டிப்புட்ட!.. பீச்சையே சூடாக்கிய முல்லை நடிகை….

google news
Continue Reading

More in Cinema History

To Top