Connect with us
suriya

Cinema News

இன்னமும் மாறாத பாலா..கடுப்பான சூர்யா..விலகியதற்கு இதுதான் காரணமாம்!….

தமிழ் சினிமாவில் சேது திரைப்படம் அறிமுகமானவர் இயக்குனர் பாலா. அதன்பின் நந்தா, பிதாமகன், நான் கடவுள் என வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி தனக்கென ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார். அதிலும், ‘நான் கடவுள்’ படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது.

ஆனால், அப்படத்தோடு சரி..அதன்பின் அவர் இயக்கிய அவன் இவன், தாரை தப்பட்டை என சில படங்கள் ரசிகர்களை கவரவில்லை. மேலும், தெலுங்கில் ஹிட் அடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை தமிழில் விக்ரமின் மகன் துருவை வைத்து ‘வர்மா’ என்கிற பெயரில் இயக்கினார் பாலா. ஆனால், அப்படத்தை அவர் எடுத்த விதம் திருப்தி இல்லை எனக்கூறி தயாரிப்பு நிறுவனமே படத்தை கிடப்பில் போட்டது. அதன்பின் சில வருடங்கள் பாலா எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. அதோடி, சொந்த வாழ்விலும் சில கசப்பான சம்பவங்கள் அவருக்கு நடந்தது.

suriya

அப்போதுதான் அவருக்கு கை கொடுக்க வந்தார் சூர்யா. இருவரும் இணைய வணங்கான் படம் துவங்கப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், அந்த படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை. சூர்யாவும் வெவ்வேறு படங்களில் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: தல இது கொல மாஸ்!..துணிவு படத்தின் அசத்தல் புகைப்படங்கள் உள்ளே!….

இந்நிலையில்தான், வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கதையில் தான் செய்த சில மாற்றங்கள் சூர்யாவுக்கு பொருந்தவில்லை என்பதால் நங்கள் இருவரும் இப்படத்தில் தொடர்ந்து பயணிக்கவில்லை என பாலா அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், நந்தா, பிதாமகன் போல நான் பார்த்த சூர்யாவோடு மீண்டும் நாங்கள் இணைவோம் என்றும் பாலா அதில் குறிப்பிட்டுள்ளார்.

suriya

suriya

பொதுவாக பாலா சரியான திட்டமிடல் இல்லாமல் படம் எடுப்பவர். இதுதான் கதை, இத்தனை நாள் படப்பிடிப்பு, இப்போது ரிலீஸ் என அவரிடம் எந்த திட்டமிடலும் இருக்காது. பல மாதங்கள் படப்பிடிப்பு நடத்துவார். எடுத்த காட்சிகளையே மீண்டும் மீண்டும் எடுத்து நடிகர்களை பெண்டு கழட்டுவார். வணங்கான் படத்திற்கும் இதுதன் நடந்திருக்கிறது.

bala

bala

சேது படத்தை பார்த்துவிட்டு பாலாவிடம் சென்று வலிய வாய்ப்பு கேட்டார் சூர்யா. அப்படி உருவான திரைப்படம்தான் நந்தா. பிதாமகன் மூலம் தன்னை நடிகராக மோல்ட் செய்தவர் பாலா என்கிற நன்றியுணர்ச்சியில்தான் பாலாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் சூர்யா. ஆனால், பாலா இன்னும் மாறவே இல்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். படப்பிடிப்பில் பாலாவின் நடவடிக்கையால் அதிருப்தியான சூர்யா அவரிடம் சொல்லிக்கொள்ளாமலேயே சென்னை கிளம்பி சென்றார். அதன்பின் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவே இல்லை.

தற்போது வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாக அறிவித்துள்ளன. மீண்டும் இணைவோம் என இருவரும் சொல்லிக்கொண்டாலும் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறது கோலிவுட் வட்டாரம்..

காத்திருப்போம்!…

 

google news
Continue Reading

More in Cinema News

To Top