தகடு தகடு டயலாக்குக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட ரஜினி டயலாக்..! பிரபலம் சொன்ன ஆச்சரிய தகவல்..!

Published on: December 27, 2023
---Advertisement---

Rajinikanth: கோலிவுட்டில் 80ஸ்களில் தொடங்கிய ரஜினி ஆதிக்கம் இன்னமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கு என்று தான் சொல்லலாம். அப்படி அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் காலம் கடந்தாலும் வைரலாகவே இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தினை கொடுத்து இருக்கிறது. அப்படி ரஜினியின் ஹிட் வசனம் உருவான ஆச்சரிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

அப்போதைய கோலிவுட்டின் ஐகானாக இருந்தவர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் தான். அந்த நேரத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் காக்கி சட்டை. இப்படத்தில் வில்லனாக சத்யராஜ் நடித்திருப்பார். சத்யா மூவிஸ் சார்பில் உருவான இப்படத்தில் தகடு தகடு டயலாக் மிகவும் பிரபலமாக இருந்தது. அந்த டயலாக்குக்கு ஈடாக ரஜினி படத்திலும் ஒரு ஹிட் டயலாக்கை உருவாக்க படக்குழு நினைத்ததாம்.

இதையும் படிங்க: செம டெரர் பீஸா இருக்காரே சூர்யா!. வைரலாகும் ‘கங்குவா’ லுக் புகைப்படம்!..

அந்த நேரத்தில் உருவானது தான் மிஸ்டர் பாரத் திரைப்படம். இப்படத்திலும் சத்யராஜே வில்லனாக இருந்தார். படத்தினை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. எஸ்.பி.முத்துராமன் இப்படத்தினை இயக்கினார். முத்துராமனும் பலவாறு யோசிக்க அவருக்கு சரியாக வசனம் பிடிப்படவே இல்லையாம்.

ஒரு கட்டத்தில் எம்.சரவணன், அப்போதைய ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் உமாபதியை அடிக்கடி பார்க்கும் போது என்னம்மா கண்ணு என்பாராம். இது சரவணனுக்கு நியாபகம் வந்து இருக்கிறது. அவர் அந்த ஐடியாவை சொல்ல படக்குழுவும் உடனே ஓகே செய்துவிட்டார்களாம். அப்படி தான் என்னம்மா கண்ணு, செளக்கியமா டயலாக் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: அஜித் படத்துக்கே ஐடியா கொடுத்த நடிகர் சிவா.. இந்த பட டயலாக்கை நோட் பண்ணிங்களா?

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.