நடிகர் ஸ்ரீ இப்படி ஆனதுக்கு காரணமே இதுதான்!.. லீக்கான பகீர் தகவல்!…

Actor Sri: சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபத்தில் கிடைத்துவிட்டாது. சினிமா துறைக்கு குறிப்பாக நடிக்க வேண்டும் என ஆசைப்படும் சென்னையை சேர்ந்தவர்கள் லயோலா கல்லூரியில் விஸ்வல் கம்யூனிக்கேஷன், அல்லது தரமணி நடிப்பு கல்லூரியில் நடிப்பு தொடர்பான படிப்பு, அல்லது எதாவது தனியார் கல்வி நிலையத்தில் நடிப்பு பயிற்சி என எதையாவது படித்துவிட்டு வாய்ப்பு தேடுவார்கள்.
அப்படி வாய்ப்பு கிடைத்து சில படங்களில் நடித்துவிட்டு சினிமாவில் நீடித்து நின்றவர்களும் உண்டு. காணாமல் போனவர்களும் உண்டு. அதற்கு பல காரணங்கள் இருக்கும். மதுப்பழக்கம், சொந்த வாழ்க்கையில் பிரச்சனை, தொடர் தோல்வி என சொல்லலாம். சினிமா ஒருவரை உச்சத்திலும் வைக்கும். ஒருவரை பாதாளத்திலும் தள்ளும். அது அவரவரின் மன உறுதியை பொறுத்தது.

சமீபத்தில் நடிகர் ஸ்ரீ-யின் புகைப்படங்களும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோக்களும் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஏனெனில், மெலிந்த வெற்று உடம்பு, நீண்ட தலைமுடி.. அதிலும் சிவப்பு நிற கலரிங் பூசி வேறு மாதிரி இருந்தார். அதோடு, ‘செக்ஸி கேர்ள்ஸ்’ என்னுடன் சேட் பண்ணுங்க என பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு என் 18/9 என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர்தான் ஸ்ரீ. இவரின் முழுப்பெயர் ஸ்ரீராம் நடராஜன். லயோலா கல்லூரியில் படித்து விட்டு சினிமாவில் நுழைந்தார். வழக்கு எண் படத்திற்கு பின் மிஷ்கினின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்தார்.

அதன்பின் சோன் பப்படி, வில் அம்பு, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநாகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தார். இதில் வில் அம்பு, மாநகரம் போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இன்னும் நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த போதுதான் இப்போது இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார். மது மற்றும் போதை மருந்து பழக்கத்திற்கு ஸ்ரீ ஆளாகிவிட்டதாக சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
கடந்த இரண்டு வருடங்களாக ஸ்ரீ எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதோடு, அவர் நடித்த படங்களுக்கு அவருக்கு பேசப்பட்ட சம்பளமும் கொடுக்கப்படவில்லை. அதோடு, பெற்றோருடன் இல்லாமல் தனியாக வசித்து வருவதால் மனதளவில் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் அவரின் நண்பர்கள். அதோடு, அவரை தொடர்பு கொண்டு அவரை சரி செய்யும் முயற்சியிலும் சிலர் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.